எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த பொருட்செலவில் அதிக பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மற்றும் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தோட்டக்கலை பயிர்களுக்கான மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி பயனாளிகள் அமைத்துள்ள தோட்டக்கலைப் பயிர் தோட்டங்களை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தோட்டக்கலைப் பயிர்களாக மிளகாய், கொத்தமல்லி, கத்தரி, வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறன. வறட்சியான சூழ்நிலையிலும், குறைந்த அளவில் நீரைப் பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்திடும் விதமாக தோட்டக்கலைத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குவதோடு, விவசாயிகளுக்கு பசுமைக்குடில், பந்தல் தோட்டம், சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றிற்கு மானிய உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குத்தரவை கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பாக உயர்தொழில்நுட்பத்துடன் பசுமைக்குடில் அமைப்பதற்கு மானிய உதவி வழங்கும் திட்டத்தினைப் பயன்படுத்தி ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்துள்ளார். இந்த பசுமைக் குடிலானது அரசு மானியமாக ரூ.4.75 லட்சம் மற்றும் விவசாயியின் பங்களிப்பாக ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.9.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் விளைச்சல் ரக வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பசுமைக் குடிலில் சொட்டு நீர் பாசன வசதியும்; இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பசுமைக்குடிலில் ஒவ்வொரு இலைக் கொத்திலும் சுமார் 6 முதல் 10 வரை வெள்ளரிக்காய் மகசூல் கிடைக்கிறது. மேலும் ஒவ்வொரு அறுவடைக்கும் சுமார் 500 முதல் 750 கிலோ வரை வெள்ளரி விளைச்சல் செய்து பயனடைந்து வருவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அதேபோல கடலாடி வட்டம் கடுகுசந்தை கிராமத்தை சார்ந்த நாகலிங்கம் மனைவி இந்துராணி என்பவர் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்படும் மானிய உதவித்தொகையினைப் பயன்படுத்தி 4.00 எக்டர் பரப்பளவில் தரமான பந்தல் அமைத்து பீர்க்கு, பாகல், புடல், சுரை மற்றும் வீரிய ஒட்டு தக்காளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். இப்பந்தல் தோட்டம் அமைப்பதற்கு அரசு மானியமாக ஏக்கருக்கு ரூ.80ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பந்தல் சாகுபடிக்கு சொட்டு நீர் பாசன வசதியும்; அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சொட்டு நீர் பாசனத்தின் வழியாக நீர்உரமாக செடிகளுக்கு பாய்ச்சும் வசதியும் உள்ளது. இப்பந்தல் தோட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.30ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை வருமானம் பெற்று பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.
இவ்வாறு கலெக்டர்; முனைவர்.ச.நடராஜன் மேற்குறிப்பிட்டுள்ள பசுமைக்குடில் மற்றும் பந்தல் தோட்டம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயிர்சாகுபடிக்காக தாங்கள் மேற்கொண்டு வரும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கலெக்டரிடம் விளக்கம் அளித்தனர். பயிர் சாகுபடியில் குறைந்த அளவு தண்ணீர் மற்றும் பொருட்செலவில் அதிக மகசூல் பெற்றிடும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டும் என கலெக்டர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார். மேலும் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற மானிய உதவி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களிடத்தில் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் ச.தமிழ் வேந்தன், வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் திறக்கலாம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனுமதி
01 May 2024சென்னை : 'அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை; ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்' என தமிழக தலை
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான் : ஆலங்குடி, குருவித்துறையில் சிறப்பு வழிபாடு
01 May 2024திருவாரூர் : மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரம் செய்ய தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
01 May 2024ஐதராபாத் : தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.