முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகள் - பார்கள் மூடப்படும்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      சென்னை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகள் - பார்கள் மூடப்படும் என்று சென்னை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல். 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல். 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல். 3 (‘ஏ’) உரிமம் கொண்ட தமிழ்நாடு சுற்றுலா கழக பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்கவேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்