முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட வன அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணி அருந்ததியினர் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      நீலகிரி

மாவட்ட வன அலுவலகத்தில் உதவி வரைவாளர் பணிக்கு அருந்ததினர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு கோட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                  டிப்ளமோ சிவில் இன்ஜினியர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வடக்கு வனகோட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவி வரைவாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதிவாய்ந்த பழங்குடியி(எஸ்.சி. அருந்ததியினர்) விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 01.01.2017 அன்று 35 வயது மிகாமல் இருக்க வேண்டும். கல்வித்தகுதி டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியர்.

                             நேரில் ஆஜராக வேண்டும்

தகுதியுடையவர்கள் 22.02.2017 அன்று காலை 10 மணிக்கு ஊட்டியிலுள்ள நீலகிரி வடக்கு வன கோட்ட அலுவலகத்திற்கு சுய ஒப்பமிட்ட கல்விச்சான்று, இருப்பிட சான்று, பிறப்புச்சான்று, சாதிசான்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அட்டை சான்று, புகைப்படம்_2, மற்றும் சுய விலாசமிட்ட அஞ்சல் உறை_2 ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக வேண்டும். இத்தகவலை நீலகிரி வடக்கு கோட்ட மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்