முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி பழனி மாணவர் 3 -ம் இடம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம். திண்டுக்கல் மாவட்டம், பழனி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருபவர் கமல்நாத். இவர் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களை வென்று, பரிசுகளை பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பழனி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கமல்நாத் கலந்து கொண்டு, 17- வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாநில அளவில் 3-ம் இடம் பிடித்த மாணவர் கமல்நாத்-க்கு வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர் கமல்நாத்-தை  பழனி மாவட்ட கல்வி அலுவலர் ஜாகீர் உசேன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பழனி விவேகனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் காசி ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர்கள்  பாலாஜி, அக்பர்அலி, பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்