எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் பழைமையான ரிக் வேதத்தில் சிவனது திருப்பெயர்கள் வருகின்றன. ‘சிவன்’ என்பது மிகவும் புராதன சொல். இதற்கு கல்யாணம் மங்களம், சுபம், நன்மை, மகிழ்ச்சி, லட்சுமிகரம் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.
பொதுவாக, தெய்வங்களை மிகவும் மரியாதையாக ‘மகா’ என்ற அடைமொழியுடன் அழைக்கிறோம். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, மகாகணபதி.... இப்படி அதுபோல் ‘மகா சிவன்’ என்று சிவனை அழைப்பதில்லை. அதற்குப் பதிலாக ‘சதாசிவன்’ என அழைக்கிறோம்.
‘சதா’ என்பது சிறப்பான சொல் ! இதற்கு எங்கும், எப்போதும், என்றும் இப்படிப் பொருள் கொள்ளலாம். அதாவது, எங்கும் - எப்போதும் நீக்கமற நிறைந்திருப்பவர்.
தெங்வங்களுக்குத் திருவிழாக்களும் ஏராளம் தேவியின் மகிமையைப் போற்றுவது ‘நவராத்திரி’ ஈசனின் பெருமையைச் சிறப்பிப்பது சிவராத்திரி.
வேதங்களில் சாமமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ.. அதுபோல் விரதங்களில் மிகவும் உயர்ந்தது ‘மகா சிவராத்திரி விரதம்;’ என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மாதா மாதம் சிவராத்திரி வரும் என்றாலும், மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை காலத்தில் வரும் சதுர்த்தசி தினத்தை ‘மகா சிவராத்திரி’ என்று போற்றி வழிபாடு செய்கிறோம். அன்றைய தினம் அனைத்து சிவ ஆலங்களிலும் விடிய விடிய நான்கு யாமங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கும்.
சூரியன் அஸ்தமனமான பின் தொடங்குவது முதல் யாம பூஜை. அடத்து இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்று இந்த வழிபாடு மறுநாள் அதிகாலை சூரியன் உதயமாவதற்குள் பூர்த்தி ஆகிவிடும்.
‘மகா சிவராத்திரி” பூஜையை முதலில் அம்பிகையே தொடங்கி வைத்தாள் என்று புராணங்கள் சொல்லும். இவ்வழிபாட்டில் மிகவும் மகிழ்ந்த ஈசன், உமைக்குத் தன் அருளை வழங்கினான். அப்போது “நான் செய்த இந்த நான்கு யாம வழிபாட்டை எவர் ஒருவர் செய்த கடைபிடிக்கிறாரோ.. அவருக்கு அனைத்து விதமான நலன்களையும் வழங்கி, இறுதியில் மோட்சம் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்க அதன்படி ஈசன் அருளினானாம்.
‘சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு ‘மோட்சம் அருள்வது’ என அர்த்தம்
‘மகா சிவராத்திரி’ காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சர்வேஸ்வரனை பூஜிப்பதாக ஐதீகம் எனவேதான் புனிதமான இந்நாளில் உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் விடிய விடிய வழிபாடு நடக்கிறது.
மார்ச் 7ந்தேதி (திங்கள் கிழமை) ‘மகா சிவராத்திரி’ வருகிறது. மாதம்தோறும் வரும் மற்ற சிவராத்திரிகளில் இறைவனை வழிபாட்டு நாம் பெறும் எல்லா நலன்களையும் மாசி மாத சிவராத்திரி மட்டுமே வழங்குவதால், இதை ‘மகா சிவராத்திரி’ என்று போற்றுகிறோம்.
சிவராத்திரியின் பெருமையை சிவமகா புராணம் ஸ்கந்த புராணம், பத்ம புராணம் போன்றவை எடுத்துரைக்கின்றன. சிவபெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டு விரதங்களைப் பரிந்துரைக்கின்றன நூல்கள். அவை சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம், ரிஷப விரதம்.
இவ்விரதங்களில் மிகவும் சிறப்பானது ‘மகா சிவராத்திரி’ விரதமாகும். எண்ணற்ற சிவ பக்தர்கள் அன்றைய தினம் முழுக்க விரதம் மேற்கொண்டு இல்லத்தில் பகலில் சிவ பூஜைகளைச் செய்துவிட்டு, மாலை வேளையில் சிவாலயங்களுக்குச் செல்வர்.
‘மகா சிவராத்திரி’ உலகம் முழுக்க பிரபலம். வட இந்தியாவில் உள்ள சிவாலயங்களில் இறைவனைத் தொட்டு நாமே அபிஷேகம் செய்யலாம். ஆனால் தென்னகத்தில் அது சாத்தியம் இல்லை.
மகா சிவராத்திரி அன்று காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயம் மிகவும் ஜெகஜோதியாகக் காட்சி தரும். லட்ச தீபம் ஏற்றப்படும். ராமேஸ்வரம் ராமநாதருக்கு ஆயிரம் குடங்களில் புனிதமான நீரைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும் வேத மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்ட ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டு விஷேச அபிஷேகம் நடக்கும்.
நேபாளத்தில் பசுபதிநாதர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்டும். நேபாள மன்னர் தன் சொந்த செலவில் ‘மகா சிவராத்திரி’ வழிபாட்டை நடத்துவார். இமயமலையில் வசிக்கின்ற எண்ணற்ற சாதுக்கள் பெரும் திரளாகத் திரண்டு வந்து பசுபதிநாதரை வணங்குவார்கள்.
ஸ்ரீசைலம், காளகஸ்தி, சென்னை மயிலாப்பூர், திருவண்ணாமலை, மதுரை போன்ற எண்ணற்ற திருத்தலங்களில் விடிய விடிய பல்லாயிரக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
சிவபெருமானுக்கு அபிஷேகம் சிறப்பு. எனவே, மகா சிவராத்திரி தினத்தில் நான்கு யாமங்களிலும் ஈசனுக்கு நடக்கின்ற விசேஷமான அபிஷேகத்தை நாம் தரிசித்தல் நலம். நம்மால் முடிந்த அபிஷேக திரவியங்களை வாங்கிக் கொடுத்தால் கூடுதல் மகிமை. ஒருவேளை வாங்கித் தருவதற்கு வசதி இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். சிவனுக்கு மிகவும் உகந்த வில்வத்தையாவது அர்ப்பணித்து வணங்கவும்.
‘ஒரே ஒரு வில்வ இலையை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தாலே முந்தைய மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அகன்றுவிடும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. வில்வ இலைகளை அர்ப்பணித்து எவர் ஒருவர் தன்னை வணங்கினாலும், அவரை எத்தகைய துயரில் இருந்தும் காப்பாற்றி அருள்வார் சிவபெருமான். அதுவும் புனிதமான ‘மகா சிவராத்திரி’ யில் வில்வ இலையை லிங்கத் திருமேனிக்கு சமர்ப்பித்தால் கோடிக்கணக்கான மலர்களைக் கொண்டு வழிப்பட்டதற்கு சமம்.
‘மகா சிவராத்திரி விரதம்’ மேற்கொள்வது எப்படி
அன்றைய தினம் இரவு முழுக்கக் கண் விழித்து விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் இருப்பவர்கள்முதல் நாள் பகல் பொழுதில் மட்டும் உணவு அருந்தவும், அடுத்த நாள் ‘மகா சிவராத்திரி’ காலையில் குளித்துவிட்டு, சிவபெருமானுக்கு உண்டான வழிபாடுகளைச் செய்யவும். மாலையில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.
நான்கு யாமங்களிலும் ஒரே சிவாலயத்தில் இருந்து வழிபட்டாலும் சரி.. அல்லது ஒவ்வொரு யாதத்துக்கும் ஒரு சிவாலயம் சென்று தரிசித்தாலும் சரி நான்காம் யாமம் தரிசித்த பின் இல்லம் வந்து நீராடவும். அதன் பின் முடிந்த அளவுக்கு சிவனடியார்களை அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டுத் தானும் உண்ணவும் விரதம் என்பது ஒரு கட்டுப்பாடு உணவையும் உறக்கத்தையும் விலக்கினால்தான் புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட்டால் தான் இறை இன்பம் பெற முடியும்.
சிவராத்திரி அன்று முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள்.. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு யாம பூஜை பூர்த்தியான பிறகு பால் பருகலாம். பழங்கள் உண்ணலாம். தண்ணீர் அருந்தலாம். சுர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பு இல்லாமல் அவித்துச் சாப்பிடலாம். சக்தி தரும் சத்துமாவை வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளலாம்
‘மகா சிவராத்திரியில் எப்பேர்பட்ட கொடுடையானவர்களும் சிவனை தரிசித்தால் இறைவனின் பரிபூரண ஆசி உண்டு. இதை விளக்கும் விதமாக எத்தனையோ புராணக் கதைகள் கூறப்பட்டாலும் பொதுவாகச் சொல்லப்படுவது இதுதான்.
அடர்ந்த வனத்தில் நள்ளிரவில் சிக்கிக்கொண்ட வேடன் ஒருவன் பாதுகாப்புக்காக இடம் தேடும்போது புலி துரத்த ஆரம்பித்தது. பயத்தின் காரணமாக அலறி அடித்தபடி ஒரு மரத்தின் மீதேறி வலுவான கிளையில் அமர்ந்து கொண்டான். துரத்தி வந்த புலி இவன் எப்படியும் கீழே இறங்குவான் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மரத்தின் அடியில் அமர்ந்துவிட்டது.
புலி நகர்வதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வேடனும் மரத்திலேயே இருந்தான. நாம் தூங்கக்கூடாது.. தூக்கத்தில் கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இரையாகிவிடுவோம் என்று பயந்து தான் அமர்ந்த மரத்தில் இருந்து இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பிய்த்துக் கீழே போட்டான்.. மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருப்பதும், அது ‘மகா சிவராத்திரி தினம் என்பதும் வேடனுக்குத் தெரியாது.
அதிகாலை மலர்ந்தது புலியைக் காணாததால் கீழே இறங்கினான். அப்போது சிவலிங்கத்தில் இருந்து ஈசன் வெளிப்பட்டு நேற்றைய தினம் மகா சிவராத்திரி உறங்கவும் இல்லை. உணவும் அருந்தாமல் விரதம் கடைபிடித்திருக்கிறாய். தவிர நீ அமர்ந்திருந்தது வில்ல மரம். எனக்கு வில்வத்தைக் கொண்டு அர்ச்சித்ததால் உனக்கு சகல நலன்களும் வழங்குகிறேன். உரிய காலத்தில் மோட்சம் தருவேன். என்று ஆசிர்வதித்து மறைந்தாராம்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்வதால் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு அகல்கின்றன. ஆலயங்களிலும், வீடுகளிலும் நமசிவாய மந்திரத்தை அதிகம் ஜெபிக்க வேண்டும். முக்கியமாக படிக்க வேண்டியது - திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம்.
இதை படித்தால் மனதில் இருக்கும் பயம் அகலும். தைரியம் பெருகும் தவிர சிவபுராணம் லிங்காஷ்டகம், தேவாரம் திருவாசகம் ஆகயவற்றையும் படிக்கலாம் திருவிளையாடல் புராணம் பெரிய புராணம் ஆகியவற்றைப் பிறர் சொல்லக் கேட்டாலும் அல்லது நாமே படித்தாலும் கூடுதல் பலன் பெறலாம்
புனிதமான மகா சிவராத்திரி தினத்தில் சிவலிங்கத் திருமேனியை தரிசித்து தீங்கு இல்லா வாழ்வு பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட