முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொந்தரவு: கேரள முதல்வருக்கு விஷால் கடிதம்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள முதல்வருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிக்கும் விஷால் பிச்சாவரத்தில் தங்கி உள்ளார். நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பாவனா போல் பல பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன் கொடுமைகள் வெளியில் தெரிவது இல்லை.அப்படியே தெரிந்தாலும் சரியான நடவடிக்கை இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் குட்டச், பேட்டச் சொல்லி வளர்க்க வேண்டும், அரசும் மாணவர் களுக்கு செக்ஸ் கல்வியை பாடமாக கொண்டுவந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கடந்த சில ஆண்டுகளாக பெண் களுக்கு எதிராக வன் கொடுமைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வந்து தண்டனை வழங்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்