எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினம், அக்.- 10 - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான நான்கு நாடுகள் ஒரு நாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இலங்கை ஆகிய 4 நாடுகளுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவும், இலங்கை அணியும் கோப்பையை கைப்பற்ற களமிறங்கின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் துவக்க வீரர் வோஹ்ரா 2 ரன்களை மட்டும் எடுத்து டிமெல் பந்தில் ஜெயசிங்கேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய விகாரி நிதான ஆட்டத்தை மேற்கொண்டார். ஆனால் அவரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 9.4 ஓவர்களில் 32 ஆக இருந்தபோது 15 ரன்களை எடுத்திருந்த விகாரி, மதுசங்காவின் பந்தில் பெர்னாண்டோவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய தியோபிராட் 2 ரன்களை மட்டும் எடுத்து தனுஷ்காவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். அதுவரை நிதான ஆட்டம் ஆடிய துவக்க வீரரும் கேப்டனுமான உன்முக்த் சந்த்தும் 14 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து இறங்கிய அபராஜித், மதுசங்காவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் திக்வெல்லவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டாக இந்திய அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்களை மட்டும் எடுத்து தடுமாறியது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்மித் பட்டேல், நாத் ஆகியோர் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து இந்திய அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 67 ரன்களை எடுத்தது. அணியின் எண்ணிக்கை 104 ஐ எட்டியபோது 31 ரன்களை எடுத்திருந்த ஸ்மித் பட்டேல், மதுசங்காவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கலேரியா 4 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ஹர்மீத் சிங், நாத்துடன் சேர்ந்து ஓரளவு சிறப்பாக விளையாட அணியின் எண்ணிக்கை 150 ஐ கடந்தது. நாத் 55 ரன்கள் எடுத்து அபோன்சோவின் பந்தில் அவுட்டானார். இறுதியில் இளம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 168 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சந்தீப் சர்மா ஆட்டமிழக்காமல் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் மதுசங்கா 10 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அபோன்சா 2, டிமெல், தனுஷ்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இலங்கை அணியின் முதல் 5 விக்கெட்டுகள் 27 ரன்கள் எடுப்பதற்குள் விழுந்தது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த திசாகுட்டிகே(29) மற்றும் மதுசங்கா(63) ஆகியோர் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும் இறுதியில் இலங்கை அணி 46.5 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கோப்பையை வென்றது. இந்திய தரப்பில் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளையும், கலேரியா 3 விக்கெட்டுகளையும், அபராஜித், விகாஷ் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நான்கு நாடுகள் கலந்துகொண்ட இந்த போட்டியில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.