எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, மார்ச் - 7 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இந்தியா திணறல் வெற்றியைப் பெற்றது. 10 வது உலக கோப்பையின் பி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, டெஸ்ட் அந்தஸ்து பெறாத அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதே மைதானத்தில் கடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து அணி இன்று இந்திய அணியை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு மற்றும் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்டிர்லிங் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை ஒரு ரன். இதையடுத்து ஜோய்ஸ் களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஓபிரைன், கேப்டனுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினார். குறிப்பாக போர்ட்டர்பீல்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 122 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ஓபிரைன் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஒயிட்டும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது பந்துவீச வந்த யுவராஜ்சிங், 5 ரன்கள் எடுத்திருந்த ஒயிட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். கேட்ச் பிடித்து அவுட்டாக்கியவர் தோனி. அடுத்து கடந்த லீக் போட்டியில் அதிரடியாக சதமடித்து இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த கெவின் ஓபிரைன் களமிறங்கினார். ஆனால் இவரது விக்கெட்டை யுவராஜ்சிங் தானே பந்துவீசி தானே பிடித்து காலி செய்தார். ஓபிரைன் எடுத்த ரன்கள் 9 மட்டுமே. அப்போது அணியின் எண்ணிக்கை 33.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களாக இருந்தது. அடுத்து குசாக், போர்ட்டர்பீல்டுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த போர்ட்டர்பீல்டு 75 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 160. அடுத்து வந்த மூனேயும், யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க அயர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து குசாக்குடன் ஜோடி சேர்ந்தார் ஜான்ஸ்டன். ஆனால் குசாக்கும் 24 ரன்களை எடுத்திருந்தபோது யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 184. அடுத்து வந்த டோக்ரெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201. ஜோன்ஸ்டன் 17 ரன்களை எடுத்திருந்தபோது முனாப் பட்டேலின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனால் அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்தது. ரான்கின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னை எடுத்திருந்தார். இந்திய தரப்பில் யுவராஜ்சிங் அபாரமாக பந்துவீசி 31 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஹீர்கான் 2 விக்கெட்டுகளையும், முனாப்பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லா இந்த போட்டியிலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்கை இந்திய அணி சேஸ் செய்தது. துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக சேவாக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அணியின் எண்ணிக்கை அப்போது 9. அடுத்து டென்டுல்கருடன், காம்பீர் ஜோடி சேர்ந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெறும் 10 ரன்களை எடுத்திருந்தபோது காம்பீர் ஜான்ஸ்டனின் பந்தில் குசாக்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணியின் எண்ணிக்கை 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 24. அடுத்து இளம் வீரர் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் டென்டுல்கரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 87 க்கு உயர்ந்தபோது டென்டுல்கர் 56 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் டோக்ரெலின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் களமிறங்கினார். இந்நிலையில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அப்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோக்ளி 34 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி, யுவராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. அணியின் மொத்த ஸ்கோர் 167 ஐ அடைந்தபோது தோனி 34 ரன்களில் டோக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் யூசுப்பதான் களமிறங்கினார். இவரும் யுவராஜ் சிங்கும் வெற்றிக்கு தேவையான ரன்களை கடைசியில் அதிரடியாக சேர்த்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் அரைசதம் கடந்தார். யூசுப்பதான் 24 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 46 ஓவர்களில் 210 ரன்களை அடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அயர்லாந்து தரப்பில் ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், டோக்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்ததால் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட