முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும்: சிவசேனை கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, அக். - 17 - காஷ்மீர் குறித்து பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறிய பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் உள்ள சிவசேனை அமைப்பு தெரிவித்துள்ளது.  காஷ்மீரில் உள்ள ராணுவப் படையினரை திரும்ப பெற வேண்டும். ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என அவர் கூறிய கருத்துக்கள் தேவையில்லாதது என சிவசேனை அமைப்பின் மாநில தலைவர் அசோக் குப்தா தெரிவித்தார். அவரை தமது குழுவிலிருந்து ஹசாரே விலக்கி வைக்க வேண்டும் என்றும் குப்தா வலியுறுத்தினார். முன்னதாக இந்த அமைப்பை சார்ந்தவர்கள் பேரணி மேற்கொண்டதோடு பிரசாந்த் பூஷன் உருவ பொம்மையையும் எரித்தனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்