எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 58 பணிகள் ரூ.4 கோடி செலவில் குடிமராமத்து பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன என செய்தியாளர்கள் சுற்றுப் பயணத்தில் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் பயணம்
திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் மணச்சநல்லூர் வட்டம், சாந்தப்பாடி பெருவளைவாய்க்கால், இலால்குடி வட்டம், பூவாளுர் கிராமத்திற்குட்பட்ட மாதானம் ஏரியில் வழங்குவாய்க்கால் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்ததாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி வறட்சியினை எதிர்கொள்ளவும், மழை நீரை திறம்பட சேமித்தும், புதிய நீர்வள ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மையை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், வரத்து வாய்க்கால் மற்றம்; கால்வாய்களில் களைகள், முட்செடிகள் மற்றும் அடர்ந்த சிறு செடிகளை அகற்றுதல், ஏரிக்கரைகளைப் பராமரித்தல், வரத்துவாய்க்கால், கால்வாய்கள் மற்றும் ஏரி மதகுகளில் படிந்துள்ள மண்படிமானங்களை நீக்குதல், மழை மற்றும் கால்நடைகளால் ஏற்பட்ட மேடு பள்ளங்களைச் சமன் செய்தல், மதகுகள், அடைப்பான்கள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகள் ஆகியவற்றைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வரும் நிதியாண்டுகளில் குடிமராமத்துப் பணிகள் நபார்டு நிதியதவியுடன் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன கட்டமைப்புகளான மதகுகள், மிகை நீர் கலிங்குகள், குறுக்கு கட்டுமான அமைப்புகள் ஆகியவற்றை மறுகட்டுமானம் செய்தல், ஏரிகளை தூர்வாரி அதன் முழு கொள்ளளவை மீட்டெடுத்தல், ஏரிக்கரைகளைப் பலப்படுத்துதல், தரப்படுத்துதல் ஆகிய பெரும்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் ஒரு பகுதியாக முதற்கட்டமாக பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர் நிலைகளை புனரமைக்க குடிமராமத்து திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 30 மாவட்டங்களில் 1519 பணிகள் ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் நீர்வள ஆதாரத்துறை மற்றும் அரியாறு வடிநில கோட்டத்தின் சார்பில் 58 பணிகள் 4 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏரிகள் தூர்வாருதல் வழங்குவாய்க்கால் தூர்வாருதல், ஏரிக்கரை பலப்படுத்துதல், மடை பராமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், கலிங்கு பாரமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள், மதகு பாரமரிப்பு மற்றும் கட்டுமானப்பணிகள் ஆகிய பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் 27.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், திருவெறும்பூர் வட்டத்தில் 19.80 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், இலால்குடி வட்டத்தில் 19.85 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், துறையூர் வட்டத்தில் 76.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 9.2 இலட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், முசிறி வட்டத்தில் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், மற்றும் மணப்பாறை வட்டத்தில் 44.4 இலட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும் செயலாக்கத்தில் உள்ளது. இப்பணிகளில் 10 பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. எஞ்சியுள்ள பணிகள் வரும் மே – 2017இல் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மாடக்குடி, சாந்தப்பாடி வாளக்குறிச்சி கிராமம், பழைய பெருவளை வாய்க்கால் மைல் 0,0 முதல் 1,2 வரை உள்ள பிரிவு வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ.5.50 இலட்சங்கள் மதிப்பீட்டில் பணிகள் துவங்;கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலணை அகண்ட காவிரியில் இடது கரையிலிருந்து பெருவளை வாய்க்கால் பிரிகின்றது. பெருவளை வாய்க்கால் மைல் 13,1 பழைய பெருவளை வாய்க்கால் பிரிகின்றது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 4.00 கி.மீ ஆகும். இவ்வாய்க்கால் ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு, மேலணையின் பாராமரிப்பில் உள்ளது.
பெருவளை வாய்க்கால் மைல் 15.4-ல் இரத்தனக்குடி அணைக்கட்டிலிருந்து கீழ்பெருவளை வாய்க்கால் பிரிகிறது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 14.80கி.மீ ஆகும். கீழ்பெருவளை வாய்க்கால் மைல் 5.6 ல் மாதானம் ஏரி வாய்க்கால் பிரிகிறது. கீழ்பெருவளை வாய்க்கால் வலது கரை மைல் 5,2ல் பிரியும் பல்லவரம் பெரிய மதகு வாய்க்கால் மூலம் 614.13 ஏக்கர் நிலங்களும், வலது கரை மைல் 5,6ல் பிரியும் மாதானம் வழங்கு வாய்க்கால் மூலம் 208.43 ஏக்கர் நிலங்களும், எல்லையம்மன் கோவில் வழங்கு வாய்க்கால் மூலம் 25.03 ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன. இவ்வாய்க்கால் மூலம் திருமணமேடு, தண்டங்கோரை, பம்பரம்சுத்தி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இவ்வாய்க்கால்களில் கடந்த காலங்களில் பெய்த மழையினாலும், வெள்ளத்தினாலும் வடிகால் கரையில் உள்ள மண் அடித்து சென்று வடிகால் மேடிட்டு மண்திட்டுகள் மற்றும் ஆங்காங்கே காட்டாமணக்கு செடிகள், அல்லிக்கொடிகள் படர்ந்து நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ளன. இதனால் நீர்த்தேக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள பாசன நிலங்களை மூழ்கடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனை சீரமைக்க இப்பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது இலால்குடி ஆற்றுப் பாதுகாப்பு உபகோட்ட உதவிப் செயற்பொறியாளர் ஆர்.வெங்கடேஷ், மேலணை, ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு இளம் பொறியாளர் சு.தனசேகர், இலால்குடி ஆற்றுப்பாதுகாப்பு பிரிவு, உதவி பொறியாளர் த.தர்மலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல