எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தென் இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று முதல் தொடங்கியது. 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
ஸ்டிரைக் தொடங்கியது
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற ஸ்டிரைகை அறிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் வரி விதிப்பை வாபஸ் பெறக்கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய 6 மாநிலங்களில் நேற்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது.
சரக்குகள் தேக்கம்
தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 4.25 லட்சம் லாரிகள் நேற்று ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் எதுவும் வரவில்லை. அதுபோல தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் லாரிகள் இயக்கப்படாததால் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. அரிசி, பருப்பு, எண்ணை, கோழி திவணங்கள், முட்டைகள், மஞ்சள், உள்ளிட்டவை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தேங்கியுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.1500 கோடி சரக்குகள் தேங்கியுள்ளன.
ரூ.1000 கோடி இழப்பு
இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 கோடியும், 6 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 4500 லாரிகள் நேற்று காலை 6 மணி முதல் ஓடவில்லை. ஸ்டிரைக் காரணமாக லாரிகள் உக்கடம் லாரி பேட்டை, வடகோவை ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவையில் இருந்து வெளியூருக்கு செல்ல வேண்டிய எந்த லாரியும் இயக்கப்படவில்லை. தொழில் நகரமான திருப்பூரில் லாரிகள் ஸ்டிரைக்கால் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
திருப்பூர் - நீலகிரியில் ...
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் தான் திருப்பூரில் இருந்து பனியன்கள் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது லாரிகள் ஸ்டிரைக் காரணமாக பனியன் அனுப்புவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1500 லாரிகள் இயங்கி வருகின்றன. நடைபெறும் போராட்டத்தில் 1500 லாரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, எண்ணை வித்துக்கள், இரும்பு பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றி கொண்டு தினமும் 3500 லாரிகள் செல்கின்றன.
ஈரோடு - திண்டுகல்லில்...
மேலும் 3500 லாரிகள் ஈரோடு மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலத்துக்கு செல்லும் 3500 லாரிகளும் நேற்று முன்தினம் இரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன. ஈரோடு மாவட்டத்துக்குள் ஒடும் லாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் ஓடவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் 3000 லாரிகள் ஓடவில்லை. இதனால் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் சின்ன வெங்காயம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். லாரி ஸ்டிரைக் காரணமாக வர்ததக நகரமான ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட் வெறிச் சோடியது.
நெல்லை - மதுரையில் ...
நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள டிப்பர் லாரிகள், டேங்கர் லாரிகள் உள்பட 4700 லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான மினி லாரிகளும் நேற்று ஓடவில்லை. ஒரு சில மினி லாரிகள் மட்டும் உள்ளூர் பகுதிகளில் ஓடியது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஓட வில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் அருகே ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அனைத்து லாரிகளும் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.2.5 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொருட்கள் தேக்கம்
இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நான்கரை லட்சம் லாரிகள் உள்பட தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சம் லாரிகளும் ஓட வில்லை. இந்த லாரிகள் அனைத்தும் ஆங்காங்கு செட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த போரட்டத்தால் தமிழகம் முழுவதும் தினமும் ரூ.1500 கோடி மதிப்பிலான பொருட்கள் உள்பட தென் மாநிலங்களில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்கள் பரிமாற்றம் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாயும், 6 மாநிலங்களிலும் சேர்த்து லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், மஞ்சள், உணவு பொருட்கள், துணி வகைள் உள்பட ஏராளமான பொருட்கள் தேங்கி உள்ளன. தமிழகத்தில் லாரி தொழிலை நம்பி உள்ள 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கிடையே நேற்று மதியம் எங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. எங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று மாலை தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.