எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, நவ.- 7 - இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ரன்களை சேர்த்தது. சிவ்நரைன் சந்தர்பாலின் அபார சதம் வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவில் இருந்து மீட்டது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறங்கினர். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் துவக்க வீரர்களாக இளம் கிரைக் பிராத்வைட்டும், கைரன் பவெலும் களமிறங்கினர். இவர்கள் இந்திய பந்துவீச்சை துவக்கத்தில் சமாளிக்க திணறினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தை மட்டும் கட்டுப்படுத்தினாலும் விக்கெட் விழாததால் தோனி சுழல் பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார். இதனால் 12 வது ஓவரை வீசிய ஓஜா, எல்.பி.டபிள்யூ. முறையில் பவெலின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து எட்வர்ட்ஸ் களமிறங்கினார். இவர் கடந்த வங்கதேச சுற்றுப்பயணத்தில் சதமடித்தவர். இவரும் ரன் எடுக்க திணறினார். இவரையும் ஓஜாவே காட் அண்ட் போல்டு முறையில் அவுட் ஆக்கினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இப்பொழுது துவக்க வீரருடன் அதிரடி வீரர் பிராவோ ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது வெ.இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்திலேயே அணியின் எண்ணிக்கை 72 ஆக இருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பந்து பிராவோவை ஏமாற்றி ஸ்டம்பைத் தாக்கியது. இதனால் பிராவோ 12 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக அனுபவ வீரர் சிவ்நரைன் சந்தர்பால், பிராத்வைட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடியது. 37 வயதான சந்தர்பாலும், 19 வயதான பிராத்வைட்டும் அருமையாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். துவக்க வீரர்கள் மந்தமாக விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தாத நிலையில் இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது. 41.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை கடந்தது. இந்த இருவரின் அபார ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட் உயர்ந்தது. இந்த ஜோடி 37 ஓவர்கள் ஜோடி சேர்ந்து விளையாடி 108 ரன்களை சேர்த்தது. இந்நிலையில் இந்த ஜோடியை பிரித்த பெருமை ஓஜாவைச் சேர்ந்தது. 212 பந்துகளை சந்தித்து 63 ரன்களை எடுத்திருந்த பிராத்வைட், ஓஜாவின் அற்புதமான பந்தில் விக்கெட் கீப்பர் தோனியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக சாமுவேல்ஸ் களமிறங்கினார். இவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தபோது அஸ்வின் வீசிய பந்தில் 15 ரன்கள் எடுத்திருந்த சாமுவேல்ஸ், விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்த கேட்சை பிடித்ததன் மூலம் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக சையத் கிர்மானி டெஸ்ட் போட்டிகளில் 198 கேட்ச்களை பிடித்ததே சாதனையாக இருந்துவந்தது. 62 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார் மகேந்திரசிங் தோனி. உலக அளவில் இந்த சாதனையை படைத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தோனி 13 வது இடத்தை பிடித்தார். 521 கேட்சுகளை பிடித்த தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் இந்த வரிசையில் முதலிடத்தில உள்ளார்.
சாமுவேல்சுக்குப் பிறகு கார்ல்ட்டன் பாவ், சந்தர்பாலுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் அற்புதமாக விளையாடிய சந்தர்பால் தனது 24 வது சதத்தை நிறைவு செய்தார். இது இந்தியாவுக்கு எதிராக சந்தர்பால் அடிக்கும் 7வது சதமாகும். மேலும் அதிக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் விவியன் ரிச்சர்ட்சுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பிரைன் லாரா 34 சதங்களையும், கேரி சோபர்ஸ் 26 சதங்களையும் அடித்துள்ளனர்.
ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்திருந்தது. சந்தர்பால் 111 ரன்களுடனும், பாவ் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் ஓஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டைக்கூட நேற்று வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.