எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் ரூ.12.0435 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்படுகிறது.
ஒரு தொகுப்பானது 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலப்பரப்பு உடையதாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகள் தொகுப்பில் அடங்கும். முதலாண்டில் 15 தொகுப்புகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 30 தொகுப்புகளிலும், ஆக மொத்தம் 75 தொகுப்புகளில், நிலப்பரப்பு மொத்தம் 1.875 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் 7 வட்டாரங்களில் 15 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் சேகரித்து, முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், மானாவாரி தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.
வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பில் உழவு மானியம் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 37500 ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பயிர்கள் 26,390 ஏக்கரிலும், பயறு வகை 10855 ஏக்கரிலும், எண்ணெய்வித்துக்கள் 225 ஏக்கரிலும், சாகுபடி செய்யப்பட உள்ளது. விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் வழகாட்டுதல்படி பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்க இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் அமைக்கலாம். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்காக கால்நடை துறையின் வழிகாட்டுதல் மூலம் விவசாய குழு உறுப்பினர்களுக்கு அரசு நிதியில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி : மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி முக்கியமானது. மாவட்ட அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மானாவாரி தொகுப்பிலிருந்தும் ஐந்து அலுவலர்கள் வீதம் 75 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு மற்றும் வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய அறிஞர்கள் மூலம் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வட்டார அளவிலும், பின்னர், கிராம அளவிலும் திட்ட செயலாக்கக்குழு விவசாய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய வேளாண்மை இணை இயக்குநர் - 9597251659, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வேப்பனப்பள்ளி-9443207504, மத்தூர்-9787508300, ஊத்தங்கரை-9486755252, சூளகிரி-9444685112, ஓசூர்-97508215656, கெலமங்கலம் மற்றும் தளி-9442630246, மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தில் ஏறத்தாழ 16000 சிறுவிவசாயிகள், குறு விவசாயிகள், மகளிர், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெற உள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மானாவாரி கிராம விவசாயிகள், மழைநீரை நன்கு பயன்படுத்தி, நவீன வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல், கூடுதல் வருமானம் பெற அனைத்து விவசாயிகளும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்து: கேரளாவில் சிறுவன் உள்பட 5 பேர் பலி
30 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் கார் - லாரி நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியானார்கள்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து