எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.
அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று. உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 10 மில்லியன் மக்கள் இப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில்
- ஆரம்ப நிலையில் உள்ளதனை மருத்துவர்கள் எளிதில் சிகிச்சை அளித்து சரி செய்து விடுவர்.
- அதிக பரிசோதனைகள் தேவைப்படலாம்.
- குணம் பெற சில மாதங்கள் கூட ஆகலாம்.
அதிக ஆசிட் வயிற்றில் சுரப்பது வயிற்றின் பல படிவுகளை அழித்து விடும். புண் தோன்ற இது காரணமாக இருக்கும் ஹெச் பைலோரி என்ற கிருமி பாதிப்பினால் புண் ஏற்படலாம். வலி நிவாரணம் என்பதற்காக அதிக ஆன்லரின் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படலாம். மேல்வயிற்று வலியே இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். ஆசிட் குறைக்க மருந்தும், கிருமி இருந்தால் அதற்கான மருந்தும் தேவைப்படுகின்றது.
19 வயதிலிருந்து 60&க்கும் மேற்பட்டவர்களுக்கு மிக அதிகமாகவும், 3&18 வயதுடையோருக்கு ஓரளவும், 0&3 வயதுடையோருக்கு மிக மிக குறைந்த அளவிலும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.
- மேல் வயிற்று வலி
- நெஞ்செரிச்சல்
- இரவில் வலி
- உப்பிசம், அஜீரணம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி
- அதிக காற்றுப்போக்கு
- சோர்வு
போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
- யாராவது உங்கள் ஆபிசில் அடிக்கடி உங்களிடம் கோபப்பட்டால் உங்களுக்கு டென்சன் கூடி அல்சர் வந்து விடும்.
- இராத்திரி வெகுநேரம் கண் விழித்து வேலை செய்கிறீர்களா அல்சர்தான்.
- ரொம்ப கவலைப்படாதீங்க. அல்சர்தான்.
அல்சரை பிறருக்கு கொடுப்பதும் சுலபம். அல்சரை நாம் பெறுவதும் சுலபம். அதிக ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் தான் இதற்குக் காரணம்.
வயிற்றில், உணவுப் பாதையில் உருவாகும் இப்புண் மிகுந்த வலியினைத் தரக் கூடியது. சிறுகுடலில் மேல் பகுதியிலும் இப்புண் வரும். பெட்டிக் அல்சர், டயோடிலை அல்சர் என இதனைக் குறிப்பிடுவர்.
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ஸ்டிரெஸ், கார, மசாலா உணவுகள், ஆல் கஹால் இவை மட்டுமே வயிற்று குடல் புண்களுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆய்வுகளின் முடிவாக கிருமிகள், சிலவகை மருந்துகள், புகை பிடித்தல் இவையும் புண்களுக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இந்த கிருமிகளைப் பற்றிய ஆய்வுக்காக 1982-ல் இரு டாக்டர்கள் நோபல் பரிசு பெற்றனர்.
புண்கள் ஏற்பட்டு அதில் ஹெச் பைலோரி கிருமி பாதிப்பு இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும் ஹெச் பைலோரி கிருமி பாதிப்பு உடையவர்களுக்கெல்லாம் வயிற்று புண் இருப்பதில்லை. சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் வயிற்றில் ஆசிட் சுரப்பது இயற்கையாகவே கூடுதலாக இருப்பதும் வயிற்று புண் ஏற்பட காரணமாகின்றது. இப்படி ஆசிட் சுரப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் காரணம் ஆகின்றது. வயிற்று வலிதான் புண்ணின் அறிகுறி. கடுமையான வலி, மேல் வயிற்றில் ஏற்படலாம். சாப்பிட்ட சில மணி நேரங்கள் கழித்து ஏற்படலாம். இரவு அல்லது விடியற்காலை ஏற்படலாம். ஏதாவது சாப்பிடுவதோ, ஆன் டாசிட் எடுத்துக் கொள்வதோ வலி நிவாரணமாக அமையலாம். இந்த அறிகுறிகளை ஒதுக்கி மருத்துவ உதவி பெறாமல் இருப்பது புண்ணை பெரிதாக்கி ஓட்டைகளை ஏற்படுத்தி விடும்.
இரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தாக்கி விடும்.
மேலும் சில அறிகுறிகளும் உண்டு
- பசியின்மை
- அடிக்கடி துடிக்கும் வயிற்று வலி
- அடிக்கடி ஏப்பம்
- அடிக்கடி விக்கல்
- எடை குறைவு
- வாந்தியில் ரத்தம்
- வெளிப்போக்கில் ரத்தம்
ஆகியன ஆகும்.
பல மருத்துவ சோதனைகள் இதனை கண்டறிய உள்ளன. அதற்கேற்ப சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஹெச் பைலோரி கிருமி வாய் எச்சில், உணவு, தண்ணீர் மூலம் பரவக் கூடியது என்பதனை அனைவரும் அறிய வேண்டும். ஆக எப்பொழுதும் கைகளை கழுவி சுத்தமாய் வைத்திருப்பது சிறந்த பாதுகாப்பாக அமையும். தொடர்ந்து குணமடை யாவிடில் அறுவை சிகிச்சை மூலம் ‘அல்சர்’ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ப்ளேவ நாய்ட்ஸ் எனப்படுபவை புண்கள் வெகுவாய் ஆற்ற உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது இயற்கையாகவே காய்கறிகள் பழங்களில் நிரம்பி உள்ளன.
அவை
- சோயா பீன்ஸ்
- பருப்பு வகைகள்
- ப்ரோகலி எனும் பச்சை காலி ப்ளவர்
- ஆப்பிள்
- க்ரீன்டீ ஆகும்
- தயிர்
- மோர்
- தேன்
- பூண்டு இவையும் அல்சருக்கு சிறந்தவையாக அமையும்.
தவிர்க்க வேண்டியவை :
- காபி
- புட்டியில் அடைக்கப்பட்ட பானங்கள்
- மிளகாய்
- அதிகம் வறுத்த உணவு
- அதிக மசாலா உணவு
பொதுவில் டாக்டரிடம் செல்லாமல் தானே ஏதோ ஒரு வலி நிவாரண மருந்து அல்லது டாக்டர் பல வருடங்களுக்கு முன்னால் எழுதி கொடுத்த சீட்டை வைத்து மருந்து என வாங்கி சாப்பிடுவர். இது அனைவருக்குமே தீங்கு ஏற்படுத்தலாம். குறிப்பாக அல்சர் நோயாளிகளுக்கு மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஆஸ்பரின் கொண்டுள்ள மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்படலாம். எனவே இத்தகு பாதிப்புகள் ஏற்படாது இருக்க மருத்துவ உதவி அவசியம். அல்சர் உருவாவதற்கு முன் வயிற்றுப் போக்கு ஒரு அறிகுறியாக அமையலாம். புண், வயிற்றில் ஓட்டை கூட ஏற்படுத்தக் கூடும். இதில் கிருமிகளின் தாக்குதல் ஏற்படும் பொழுது ஜுரம் ஏற்படக்கூடும். சில சமயங்களில் இந்த புண்களில் ரத்தக் கசிவு ஏற்படும் பொழுது அதிக சோர்வும், மூச்சு வாங்குவதும் ஏற்படலாம்.
வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள் :
- முன்பெல்லாம் மசாலா, கார உணவுகள் மிக முக்கியமான காரணமாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று அவை அல்சர் இருப்பவர்களுக்கு சில தொந்தரவுகளை கொடுக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.
- தியானம் கண்டிப்பாய் ஸ்டிரெஸ் நீக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டிரெஸ் அல்சருக்கு ஒரு முக்கிய காரணம்.
- வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது ஹெச் பைலோரியால் உருவாகும் அல்சர் வராது தவிர்க்கின்றது.
- மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அரைமணி நேர உடற்பயிற்சியும், நன்கு நீர் குடிப்பதும் இப்பிரச்சனையைத் தவிர்க்கும்.
- மிக வேக வேகமாக உண்ணாதீர்கள். கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வீர்கள். இப்படி உணவை அடைத்து நோய் வரவழைத்துக் கொள் வதினை விட உண்ணாமல் இருப்பது கூட குறைவான தீங்கினைச் செய்யும்.
- அதிகமாக தொண்டை வரை உண்ணாதீர்கள். தீவிர அஜீரணம் அசிடிடி, அல்சர் என கொண்டு வந்து விடும். எப்பொழுதும் அளவாக உண்ணுங்கள்.
- நெஞ்செரிச்சல், தொண்டை வரை ஆசிட் எகிறுதல் போன்றவற்றிற்குக் காரணம் அதிக மசாலா உணவு. இத்துடன் தூங்கச் செல்லும் முன் அதிக கார உணவு, அதிக உணவு, வேகமாக உண்ணும் உணவு, சிகரெட் ஆகியவை ஆகும். இவற்றினை உடனடியாக நிறுத்துங்கள்.
- வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அதிகரிப்பு
05 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 10 .41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
-
ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, பிப்.
-
3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்
05 Feb 2025காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
காசாவை கைப்பற்ற போவதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
05 Feb 2025வாஷிங்டன் : காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்
05 Feb 2025நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
சுற்றுப்பயணம்...
-
பறவையினங்களை வேட்டையாடியதாக அதிபர் டிரம்ப் மகன் மீது இத்தாலியில் வழக்குப்பதிவு
05 Feb 2025வெனிஸ் : இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு 3 ஆசிரியர்கள் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
05 Feb 2025சென்னை : பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.