எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சங்கத்தின் குழந்தைகளுக்கான பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை மனிதநேயமிக்கவர்களாக வளர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் 10வது மற்றம் 12-வது வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற செய்தியாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா ராமநாதபுரம் ஜனார்த்தனன் மாளிகையில் நடைபெற்றது. விழாவிற்கு ராமநாதபுரம் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெகஜோதி தலைமை வகித்தார். கவுரவ தலைவர் வால்டர்ஸ்காட், துணை தலைவர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் குமார் வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன், உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். விழாவில், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கல்வி கற்கும் வயதில் கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களை நன்றாக படிக்க வையுங்கள். அவர்களுக்கு எந்த கல்வி பிடிக்கும் என்பதை கேட்டறிந்து அதனை தேர்வு செய்து படிக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் உங்களின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். பெற்றோர்களின் மன ஓட்டத்திற்கு ஏற்ப கல்வியை தேர்வு செய்து அவர்களின் மனதில் திணிக்க கூடாது. பெரும்பாலான பெற்றோர்கள் இதுபோன்ற தவறினை செய்து குழந்தைகளின் மன உணர்வினை புரிந்து கொள்ளாமல் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடுகின்றனர்.
பெற்றோர்களுக்கு தெரியாதா பிள்ளைகளுக்கு எதை செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு அனைத்து நிலையிலும் சரியாக வராது. தற்போது காலம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப குழந்தைகளை வளர்க்க வேண்டும். எவ்வளவு பெரிய கல்வி கற்றாலும் மனித நேயமிக்க குழந்தைகளாக வளர்க்க வேண்டும். மனித நேயம்தான் இந்த சமுதாயத்தனை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்லும். தானும் உயர்ந்து தன் சமுதாயத்தையும் உயர்த்தும் நிலை மனித நேயத்தினால் மட்டுமே ஏற்பட முடியும். வாழ்வில் லட்சியம் மிகவும் முக்கியம். நான் எனது கல்வியில் தொடங்கி மருத்துவ பணி என அனைத்திலும் நினைத்ததை லட்சிய உணர்வுடன் எதிர்கொண்டதால் இந்த நிலையை அடைய முடிந்தது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளேன். எனது சிறுவயதில் இந்த மாவட்டத்தின் மீது இந்த மக்கள் மீதும் கொண்ட கவலை காரணமாக இன்று அமைச்சராகி என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும், பணிகளையும் மேற்கொண்டு இந்த மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று வருகிறேன். எந்த அமைச்சராலும் செய்ய முடியாத திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு செய்து கொடுப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன். எனது முயற்சியால் தற்போது சட்டக்கல்லூரி வந்துள்ளது. விரைவில் மருத்துவ கல்லூரி வர உள்ளது.
மத்திய அரசு தமிழகத்தில் மருத்துவகல்லூரி அமைப்பதற்கு தேவையான நிதி ரூ.17 ஆயிரம் கோடியை தராமல் உள்ளது. அந்த நிதி வந்ததும் இந்த மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி உறுதியாக வரும். இவ்வாறு பேசினார். விழாவில், ராமநாதபுரம் ரோட்டரி சங்க ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ராமேசுவரம் தீவு சங்க செயலாளர் மோகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் பழனி, செயலாளர் தமீம்ராசா, செய்தியாளர் சங்கத்தின் இணை செயலாளர்கள் ரகு, முருகேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் மோகன், சரவணக்குமார், பரமேஸ்வரன், ரமேஷ், ஆனந்தன், உறுப்பினர்கள் ராமு, பாலசந்தர், குருசாமி, ஆரிப்ராஜா, முகம்மது ரபீக், சோமசுந்தரம், மகேஸ்வரன், முருகன், தாகிர்உசேன், பாகற்செழியன், பாலமுருகன், கயிலைநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
........................................
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.