எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததையடுத்து சுனில் கவாஸ்கர் இன்றைய தினம் இந்திய கிரிக்கெட்டின் துக்ககரமான தினம் என்று கூறியுள்ளார்.
‘நம்பர் ஒன்’ அணி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 10-ல் வெற்றியும், 2-ல் டிராவும் கண்டது. ஒன்றில் மட்டுமே தோற்றது. அது மட்டுமின்றி டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறியது. நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது
கருத்து வேறுபாடு
இதனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அவருக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. களம் காணும் லெவன் அணியை தேர்வு செய்வது தொடர்பாக இருவருக்கும் ஒத்துவரவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பயிற்சியின் போது கூட கோலியும், கும்பிளேவும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்திய மற்றும் உள்ளூர் வீரர்களுக்கு ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று கும்பிளே தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் நிர்வாக கமிட்டியை வலியுறுத்தினார். அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கியது.
இழுபறி நிலை
என்றாலும் கும்பிளேவின் தலைமையில் அணி நிறைய வெற்றிகளை குவித்து இருப்பதால், அவரை பயற்சியாளர் பதவியில் நீட்டிக்க சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முயற்சித்தது. ஆனால் விராட் கோலி, கும்பிளேவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அடி கூட இறங்கி வரவில்லை. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், பயிற்சியாளர் நியமனம் விஷயத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.
ஒப்பந்த காலம் முடிவு
கும்பிளேவுக்கு நேற்று முன்தினத்துடன் ஓராண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கருத்தில் கொண்டு மேலும் 15 நாட்கள் அந்த பொறுப்பில் தொடரும்படி கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்கனவே கேட்டு இருந்தது. ஆனால் அதில் விருப்பம் இல்லை என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக நேற்று முன்தினம் லண்டனில் இருந்து பார்படோஸ் புறப்பட்டு சென்றது. அணியினருடன் அவர் செல்லவில்லை. ஐ.சி.சி. கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டனிலேயே இருந்து விட்டார்.
பதவியில் இருந்து ராஜினாமா
இந்த நிலையில் 46 வயதான கும்பிளே நேற்று முன்தினம் திடீரென பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் இந்திய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. பயிற்சியாளர் பொறுப்புக்கு ஷேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், டோட்டா கணேஷ், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.
சாதனை அளப்பரியது
இது குறித்து தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த கவாஸ்கர் கூறியதாவது:-
ஓகே பாய்ஸ் இன்னிக்கு பயிற்சி வேண்டாம், லீவு எடுத்துக் கொள்ளுங்கள், ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறுபவர்தான் பயிற்சியாளராகத் தேவை என்கிறார்கள். கடந்த ஓராண்டாக தனக்கு இடப்பட்ட பணிகளை திறம்பட, கடினமாகச் செய்து நல்ல முடிவுகளை அளிப்பவர் உங்களுக்குத் தேவையில்லை அப்படித்தானே? எந்த வீரர் கும்ப்ளே மீது புகார் தெரிவித்தது, அப்படி யாராவது தெரிவித்திருந்தால் அந்த வீரர்தான் முதலில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.
நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்திய அணிக்காக ஒரு வீரராகவும் கடந்த ஓராண்டில் பயிற்சியாளராகவும் கும்ப்ளேயின் சாதனை அளப்பரியது. எனவே அவர் மீது களங்கம் கற்பிப்பது, அவரைப் பற்றி மோசமாகப் பேசுவது, அவர் ஹெட்மாஸ்டர் போல் நடந்து கொள்கிறார் கடினமாக வேலை வாங்குபவர் என்றெல்லாம் கூறுவதை என்னால் ஏற்க முடியாது.
மோசமான முன்னுதாரணம்
இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும், நாளைக்கு வரும் புதிய பயிற்சியாளர் வீரர்கள் சொல்பேச்சுக் கேட்டு நடக்க வேண்டுமா? அப்படி இல்லையெனில் அனில் கும்ப்ளேவுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் அல்லவா இது இருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். கோலிக்கும் இவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்படிப்பார்த்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு இது துக்ககரமான நாள். இந்தியா உருவாக்கிய கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. இவரால் தனது பணியை செய்ய முடியவில்லை எனில் இது வருந்தத்தக்க துக்ககரமான நிலையே. அனில் கும்ப்ளே இடத்தைப் பூர்த்தி செய்யப்போவது யார் என்பது தெரியவில்லை, இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.