எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாத்தூர், நவ.- 12 - தமிழகத்தில் வெண்மைப் புரட்சி பசுமைப் புரட்சியுடன் அறிவுப்புரட்சி செய்த ஒரே முதல்வர் ஜெயலலிதா ஒருவர்தான் என்று சாத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார். சாத்தூர் தொகுதியில் உள்ள தூங்காரெட்டியபட்டியிலும் பொம்மங்கிபுரத்திலும் தமிழக அரசின் சிறப்பு நலத்திட்ட உதவிகளான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தூங்காரெட்டியபட்டியில் 53 பயனாளிகளுக்கும், கொம்மங்கிபுரத்தில் 393 பயனாளிகளுக்கும் விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸிகளை முன்னாள் அமைச்சரும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது, இன்று பெளர்ணமியும் வெள்ளிக்கிழமையும் இணைந்த லட்சுமிகரமான நன்னாளாகும். இந்த நல்ல நாளில் உங்களுக்கெல்லாம் தாய்வீட்டு சீதனமாக, இந்த விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை தங்களது வீடுகளுக்கு கொண்டுசென்று நீங்கள் அனைவரும் சுபீட்சமாக, சந்தோஷமாக உங்கள் குடும்பத்தாருடன் நீடூழி வாழ வேண்டும். தேர்தல் நேரத்தில் சொன்னதை மின்னல் வேகத்தில் நிறைவேற்றி வருகின்ற இந்தியத் திருநாட்டின் ஒரே முதலமைச்சர் நமது அம்மா ஆவார். தமிழகத்தின் ஏழு கோடி மக்களுக்காக இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நிமிடத்திலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டு இன்று தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. எல்லாத் தரப்பினரும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற தொலைநோக்கில் சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த கால ஆட்சியில் கருணாநிதியின் ஒரு குடும்பம் மட்டுமே பயன்பெற்றது. ஆனால் இன்று அம்மா அவர்கள் ஆட்சியில் 7 கோடி மக்களும் பயன்பெற்று அமைதியாக வாழ்கிறார்கள்.
இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை அம்மா அறிவிக்கின்றபோது, இவற்றையெல்லாம் தர முடியுமா? என்று பலர் கேட்டனர். கொடுக்கின்ற மனமிருந்தால் எல்லாம் தரமுடியும் நமது முதல்வர் அம்மா சொன்னார்கள். அவர் சொன்னபடி இங்கு சிறப்பு நலத்திட்ட உதவிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. ஏரத்தாழ ஒன்றரை வருடத்திற்குள் தமிழகம் முழுவதும் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவிடும் என்று முதல்வர் அம்மா தெரிவித்துள்ளார். எனவே அனைவருக்கும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி கிடைத்துவிடும் என்பது உறுதி. தமிழகத்தில் முதல்வர் அம்மா வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் விவசாயத்தில் நவீன யுக்திகள் கையாளப்பட்டு இன்று பசுமைப் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை பெறவேண்டும் என்பதற்காக லேப் டாப் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு இன்று கடைக்கோடியில் இருக்கும் மாணவ-மாணவியருக்கும் அறிவுப் புரட்சியை ஏற்படுத்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்பற்ற கிராம மக்கள் பயனடைய அவர்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர். நமது முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க. அரசு மக்கள் ஜனநாயக அரசாக இன்று செயல்பட்டு வருகிறது. இந்திய திருநாட்டின் திருவிளக்காய் உலகை ஆளுகின்ற வல்லமைபெற்ற ஒப்பற்ற நமது முதலமைச்சர் தமிழக மக்களுக்காக நல்ல பல திட்டங்களை தினம் தினம் கொண்டுவந்து நிறைவேற்றி வருகிறார். அவரது வழியில் அயராது உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தா அழகர்சாமி, சாத்தூர் ஒன்றிய சேர்மன் வேலாயுதம், வெம்பக்கோட்டை ஒன்றியச் சேர்மன் ரேவதி, துணைச் சேர்மன் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்புராம், சசீலா, பாலமுருகன், சாத்தூர் தொகுதி செயலாளர் சேதுராமானுஜம், நகரச் செயலாளர் என்.எஸ்.வாசன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஷ் செல்வம், சுபா பரமராஜ், தொகுதி இணைச் செயலாளர் தாசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அழகர்சாமி, சண்முகக்கனி, காசி துரைப்பாண்டியன், ஏழாயிரம்பண்ணை ராஜேந்திரன், ரெட்டியபட்டி சமுத்திரம், குகன்பாறை ராஜ், சிப்பிப்பாறை கவுன்சிலர் ஜெயராஜ், மினுத்தான், விஜயாபோஸ், ஏழாயிரம்பண்ணை துரைராஜ், கனகராஜ், கணேசன், சந்தனமாரி, சீனிவாசன், காளியப்பன், கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தூர் தாசில்தார் கு.பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் அதிகாரிகள் செய்திருந்தனர். முன்னதாக சிவகாசி கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.