எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பால் ஒரு இன்றியமையாத சமச்சீர் உணவாக இருப்பதோடு பச்சிளங்குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும, பெரியவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு ஆகும். நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் பாலில் இருக்கும். எனவே பாலை சரிவிகித உணவு என்று கூறலாம். இறைச்சி சாப்பிடாதவர்கள் பாலை முக்கியமாக உட்கொள்ள வேண்டும். எனவே எல்லா வகையிலும் பயனுள்ள பாலை நல்லமுறையில் அதிலுள்ள சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்ய வேண்டும்.
எனவே கறவை மாட்டின் பாலை அசுத்தம் சேராதவாறு சேகரித்து தரமான பாலை உற்பத்தி செய்வது இன்றியமையாததாகும். தூய்மை இல்லாமல் உற்பத்தி செய்யும் பாலினால் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவலாம் மேலும் பாலில் கிருமிகள் அதிகரித்து பாலின் தரத்தைக் குறைத்து விடும.; எனவே தரமான பாலை உற்பத்தி செய்வது மிகவும் இன்றியமையாததாகும்.
பால் கறத்தல் : பசுவின் மடியில் பால் சுரப்பது, பல உடல்கூறு இயக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. கன்று மடியில் ஊட்டுவதாலும், பசு தீவனத்தை பார்ப்பதாலும் அல்லது பால் கறப்பவர் மடியைத் தடவுவதாலும் நரம்புகள் மூலமக சில ஹார்மோன்கள் தூண்டப்படுவதால் பால் சுரப்பது இயக்கப்படுகிறது.
பால் கறப்பது ஒரு கலை நல்ல திறமை முதிர்ந்த அனுபவம் இவை அனைத்தும் பால் கறப்பதற்கு மிக முக்கியமாகும். பால் கறக்கும் பொழுது மிகக் கவனமாகவும் அமைதியாகவும,; அதே நேரம் விரைவாகவும் மடியில் உள்ள அனைத்து பாலை பெறும்படியும் செய்ய வேண்டும். மாடுகளுக்கு எந்த சிரமமில்லாமல் பாலை கறக்க வேண்டும்.
அடித்தல், பயமுறுத்துதல், பேரிரைச்சல் போன்றவற்றால் பால் சுரக்கும் இயக்கங்கள் தடைப்பட்டு பால் சுரப்பது நின்றுவிடும். பால் கறப்பவர் மாறினாலும் பாலின் அளவு குறையும.; பால் கறக்க ஆரம்பித்தவுடன் மடியில் உள்ள அனைத்து பாலையும் கறக்கும்படி வேண்டும். அப்படி இல்லையென்றால் பால் மடியிலேயே தங்கிவிடும்.
பால் கறக்கும் முறைகள் மற்றும் பாலில் சேரும் அசுத்தங்களை கட்டுப்படுத்தும் முறைகள்:
1. முழு விரல்களை உபயோகித்தல் : முழு விரல்களை உபயோகிக்கும் முறையில் அனைத்து விரல்களாலும் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையின் மீது அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம்முறையில் கன்று ஊட்டுவது போல அனைத்து பக்கங்களிலிருந்தும் ஒரே அளவான அழுத்தம் ஏற்படும். காம்புகள் பெரிதாக உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம்முறையைக் கையாள்வது சிறந்தது.
2. இருவிரல்களை உபயோகித்தல் : ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் காம்புகளை பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்து கீழ் நோக்கி இழுப்பதன் மூலம் கறக்க முடியும். இதன் மூலம் காம்புகளுக்கு ஒரே அளவான அழுத்தம் கிடைக்காது. மேலும் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு. இம்முறையைக் காட்டிலும் மேற்கூறிய முறைதான் சிறந்தது. எனினும் சிறு காம்புகள் உள்ள மாடுகளிலும் பால் கறந்து முடியும் தருவாயில் கடைசியில் இம்முறையைக் கடைபிடிக்கலாம்.
3.அசுத்தங்களை கட்டுப்படுத்துதல் : பால் கறக்கும்போது முதல் பாலினை நீக்கிவிட வேண்டும். ஏனெனில் கறவை மாட்டின் மாட்டின் மடியினில் சில கிருமிகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும் ஆரோக்கியமான நோயற்ற மாடுகளில் இவ்வகையான கிருமிகள் எவ்வித கெடுதலும் செய்வதில்லை. இதனால் காம்பிலுள்ள கிருமிகளை போக்கிவி;ட முடியும். கறவை மாடுகள் காசநோய், கருச்சிதைவு, கோமாரி, அடைப்பான், மடிவீக்கம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது. அதனால் மாடுகளை பரிசோதனை செய்வது அவசியம்.
மாடுகளின் உரோமம,; சாணம், மண், வைக்கோல் மற்றும் மாடுகளின் உடலில் உள்ள அசுத்தங்கள் பாலில் சேர வாய்ப்புண்டு. சில கிருமிகளும் பாலில் சேரும் எனவே மாடுகளை நன்கு தேய்த்து அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். குறிப்பாக மடியின் மீதும், பக்கத்திலுள்ள இடங்களிலும் நீண்ட ரோமம் காணப்பட்டால் அவைகளை கத்தரித்து நீக்க வேண்டும். மிக முக்கியமாக பால் கறப்பதற்கு முன் மடியில் அல்லது பக்கத்தொடை ஆகிய பாகங்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, சுத்தமான உலர்ந்த துணியினால் துடைக்க வேண்டும்.
4.மாட்டுக் கொட்டகை மற்றும் சுற்றுப்புறச்சூழல் : பால் கறக்கும் இடம் நன்கு முறையாக கழுவி சுத்தமாக இருத்தல் வேண்டும். பால் கறப்பதற்கு முன் மாடுகளை தேய்த்தல், கொட்டகையைக் கூட்டுதல,; மாடுகளுக்கு காய்ந்த தீவன வகைகளைக் கொடுத்தல் போன்றவைகளால் சுற்றுப்புறச் சூழல் அசுத்தமடைந்து பாலில் நுண்ணுயிரிகள் சேர வாய்ப்புண்டு. மேலும் குழிப்புல் சாணம் முதலியவற்றிலிருக்கும் வாசனையை பால் எளிதில் கிரகிக்கும் தன்மை கொண்டது. பால் கறக்கும் போது இவ்வசுத்தங்களைத் தவிர்த்தல் வேண்டும். குறுகிய வாயுள்ள பால் பாத்திரங்களால் ஓரளவு குறைக்க முடியும். கொட்டகையில் ஈக்கள், கொசுக்கள் பரவாமல் தடுக்க சாணம் சிறுநீர் போன்றவவைகளை அருகில் இருக்காதவாறு அப்புறப்படுத்தி அவ்வப்போது கழுவி கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
5.பாத்திரங்கள் : பாலில் அதிகிப்படியான நுண்ணுயிரிகள் பால் பாத்திரத்தின் மூலம் தான் சேருகின்றன. சரியாக சுத்தம் செய்யாத பாத்திரங்களில், கிருமிகள் பாத்திரத்தில் உள்ள சிறு பள்ளங்கள் மற்றும் விளிம்புகள் ஆகியவற்றில் இருக்க வாய்ப்புண்டு. எனவே பாலைக் கறப்பதற்கும் சேகரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்படும் பாத்திரம,; மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் ஒரே அமைப்புள்ளதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
பால் பாத்திரங்களை சுத்தம் செய்ய சோடா உப்பு (றுயளாiபெ ளுழனய) காஸ்டிக் சோடா, டிரை சோடியம் பாஸ்பேட் போன்ற இரசாயண பொருட்களை உபயோகிக்கலாம். பாலில் உள்ள கொழுப்பு, புரதம், சர்க்கரைப் பொருள் ஆகியவைகளைக் கரைத்து நீக்கும் தன்மை கொண்டது. எனவே சூடான தண்ணீரில் வாசிங் சோடாவைக் கரைத்து, அத்தண்ணீரால் பாத்திரத்தை நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகு பாத்திரத்தை உபயோகிப்பது சிறந்தது.
6.பால் கறப்பவர் : பால் கறப்பவா காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் பால் கறக்கும் போது தும்முவதாலும் பேசுவாதலும் இக்கிருமிகள் பாலில் சேர வாய்ப்புண்டு. பால் கறப்பவரின் கைகளிலுள்ள நகங்கள் நீண்டிருந்தால் அதில் சேர்ந்துள்ள அழுக்குகள் மூலம் பால் அசுத்தம் அடையலாம். எனவே நகங்களை நறுக்கி, கைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து உலர்ந்த சுத்தமான துணியில் துடைத்து அதன்பின் தான் பால் கறத்தலை தொடங்க வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு உற்பத்தி செய்யப்பட்ட சுத்தமான பாலிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருட்களின் (ளுழடனைள ழேவ குயவ – ளுNகு) அளவைக்கொண்டே பண்ணையாளர்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. பராமரிப்பு முறைகள் மற்றும் தீவன மேலாண்மை மூலம் பாலின் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவை அதிகரிக்கலாம்.
பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் :
கோடை காலமான சித்திரை, வைகாசி போன்ற காலங்களில் வெப்பநிலை கூடுதலாக இருக்கும், அப்போது பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் குறைவாக இருக்கும்.
வெயிலில் கலப்பின கறவை மாடுகளை 4 மணி நேரத்திற்கு மேல் நிற்க வைத்தாலோ, மேய விட்டாலோ பாலில் கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறையும்.
கன்று ஈன்றபின் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனம் கொடுக்கப்படவேண்டும். அப்படி கொடுக்காமலிருந்தால் பாலில் 0.4 முதல் 0.5 சதவீதம் வரை கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறையும்.
கொட்டகையின் வெப்பநிலையும் 30 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் பொழுது கொழுப்பற்ற திடப்பொருள் அளவு குறைகிறது.
பால் கறக்கும் இடைவெளி 15 மணி நேரத்திற்குமேல் இருக்கக் கூடாது. பாலினை 12 மணி இடைவெளிக்கு ஒரு முறை கறப்பது பால் உற்பத்தி குறையாமல் இருக்கும். பாலை கறக்காமல் வாரத்திற்கொருமுறை மடியில் விட்டுவிடுவதும் பால் உற்பாத்தியும், கொழுப்புச்சத்தின் அளவும் குறைவதற்கான காரணங்களாகும்.
பால் கறக்கும் போது முதலில் கறக்கப்படும் காலில் கொழுப்புச்சத்து சற்றே குறைவாகவும், நடுவில் கறக்கப்படும் பாலில் சத்து அதிகமாகவும், இறுதியில் கறக்கப்படும் பாலில் கொழுப்பு மிக அதிகமாகவும் இருக்கும். எனவே கன்றுகளுக்குத் தேவையான பாலைக் கடைசியில் கறக்கப்படும் பாலில் பொழுப்பு மிக அதிகமாகவும் இருக்கும். எனவே கன்றுகளுக்குத் தேவையான பாலைக் கடைசியில் விடாமல், கநற்தபாலினை கன்றுகளுக்கு பாத்திரத்தில் ஊற்றி குடிக்கச் செய்யவேண்டும். முடியில் குடிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு குறையாமல் பாதுகாக்க சில வழிமுறைகள் :
ஜெர்சி இன மாடுகள் அதிக கொழுப்பும், கொழுப்பற்ற திடப்பொருளும் கொண்ட பாலினை தரக்கூடியவை.
பாலினை 12 மணி நேர இடைவெளியில் சரியாக கறக்க வேண்டும். மாடுகளின் பால் உற்பத்தி திறன் நாளுக்கு 15 லிட்டருக்கு மேல் இருக்குமானால் 8 மணி நேர இடைவெளியில் அதாவது தினமும் மூன்று முறை பால் கறப்பதன் மூலம் அதன் உற்பத்தி அதிகரிக்கும்.
கறவை மாடுகளின் மடியில் ஒருவேளைக்கூட பால் தங்காமல் முழுவதும் கறப்பது நன்று.
கால்நடைகளை குளிர்ந்த நீரில் தினசரி மூன்று அல்லது நான்கு முறை குளிப்பாட்ட வேண்டும். ஆதனால் வெப்பம் குறைந்து பால் உற்பத்தி, கொழுப்பற்ற திடப்பொருளின் அளவு அதிகரிக்கும், பெரிய பண்ணைகளில் இயந்திரங்கள் மூலம் கறவைமாடுகளின் மேல் நீரினை பனி போல தெளிக்க வைப்பதும் பயனளிக்கும்.
நன்றாக அடர் தீவனம் கொடுத்து வளர்க்கப்பட்ட சினைமாடுகள் மற்ற மாடுகளைவிட அதிக அளவு கொழுப்பும், கொழுப்பற்ற திடப்பொருள்கள் கொண்ட பால் கறப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிகிறது. எனவே கன்று ஈனும் முன்னரும், கன்று ஈன்ற பினனரும் கால்நடைகளுக்கு தேவையான அளவு அடர் தீவனம் கொடுப்பது சிறந்ததாகும்.
மாடுகளை அதிகாலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்பவேண்டும். இதனால் வெயில் தாகத்திலிருந்து விடுபட்டு தீவனம் உண்ணும் அளவு குறையாமல் இருக்கும் தவிரவும் கால்நடைகளுக்கு தீவனம், வெயில் வருவதற்கு முன்போ, மாலை நேரத்திலோ அளிக்க வேண்டும்.
பசுந்தீவனத்தை கோடை காலங்களில் கால்நடைகளின் உடல் எடையில் 10 சதவீதம் வரை கொடுப்பது அவசியமானதாகும். இப்பசுந்தீவனத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொடுக்க பால் உற்பத்தி குறையாமல் இருக்கும், மேலும் அவற்றின் இனப்பொருக்க திறன் குறையாமல் இருக்கும்.
உலர்ந்த புல் தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றின் மேல் நீரை தெளித்து ஈரமாக பசுக்களுக்கு அளிக்கப்படவேண்டும்.
கால்நடைகளின் 6 மாத சினைக்காலம் முதல் 3 கிலோ அடர் தீவனம் கொடுத்து சினைமாட்டை நல்ல சதைப்பற்றுடன் வைத்திருந்தால், பால் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவம் அதிகமாக இருக்கும் கடைசி 2 மாத சினைக்காலத்தில் தினமும் 2 கிலோ அடர் தீவனம் கொடுக்கப்பட வேண்டும்.
வெயில் நேரங்களில் காற்றோட்டமாக கூரை கொட்டகையில் கட்டி வைக்க வேண்டும். கொளுத்தும் வெயிலில் மேயவிடவேண்டாம்.
சரிவிகித கலப்புத் தீவனம் அளிப்பதன் மூலமும், தேவையான அளவு தீவனம் உட்கொள்ள செய்வதன் மூலமும் பாலில் கொழுப்பற்ற திடப்பொருளின் அளவை அதிகரிக்கச்செய்யலாம்.
கறவை மாட்டுப் பண்ணையாளர்களும், விவசாய பெருமக்களும் மேற்கூறிய தரமான பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் முறைகளை கருத்தில் கொண்டு கையாண்டால் தங்கள் வாழ்க்கையையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ள முடியும்.
தொடர்புக்கு: கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோகஷ்பிரியா, மரு.சு.கிருஷ்ணகுமார், மரு.ம.சிவகுமார் மற்றும் மரு.ப.செல்வராஜ்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
தங்கம் பவுன் விலை 640 ரூபாய் அதிகரிப்பு
02 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.920 குறைந்து பவுன் ரூ.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.