எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், இந்துமகா சமுத்திர கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என்று சீனா வெளிப்படையாக கூறியுள்ளது.
வங்கக்கடல்-அரபு கடல், இந்துமகா சமுத்திரம் ஆகிய மூன்றும் கண்ணியாகுமரியில் சந்திக்கிறது. இந்துமகா சமுத்திரப்பகுதியானது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக முக்கியமான கடல் பகுதியாக இருக்கிறது. இந்த பகுதிக்கும் சீனாவுக்கும் வெகுதூரமாகும். தற்போது இந்துமகா சமுத்திர கடல் பகுதியானது சர்வதேச சமுதாயத்திற்கு சொந்தமானது என்றும் அந்த பகுதியை பாதுகாப்பதில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா கப்பல் படையும் விமானப்படையும் தயாராக இருப்பதாக அந்தநாடு கூறியுள்ளது.
சீனா பத்திரிகையாளர்கள் அழைப்பின்பேரில் இந்திய பத்திரிகையாளர்கள் சீனாவுக்கு சென்றுள்ளனர். சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீன மக்கள் ராணுவ உயரதிகாரி லி லீயை இந்திய பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது டோக்லம் பகுதி எங்கள் நாட்டுடையது என்றும் இதை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும் சரியான நேரத்தில் பதிலடி இருக்கும் என்றும் இந்தியாவை மிரட்டும் வகையில் லீ பேட்டி அளித்தார். அதனையெடுத்து சீனாவின் பாதுகாப்பு ஆலோசகரை இந்திய பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அவர் பேட்டி அளிக்கையில் டோக்லம் பிரச்சினைக்கு இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். கடந்த 1890-ம் ஆண்டு சீனாவுக்கும் பிரிட்டீஷாருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை வைத்து டோக்லம் பகுதியை சீனா உரிமை கொண்டாடக்கூடாது என்றும் அப்போது இருந்த சீனா வேறு, தற்போது உள்ள சீனா வேறு என்று அவர் நாகரீகமாக பதில் அளித்தார்.
சீனாவின் கடற்கரை நகரான ஜன்ஜியாங் நகருக்கு இந்திய பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு தெற்கு சீனா விமானப்படையின் துணை ஜெனரல் அதிகாரி லியாங் தியாஜூனை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தெற்கு சீன கடல்பகுதியில் ராணுவ வலிமையை பெருக்கியுள்ள சீனா, தற்போது இந்துமகா சமுத்திரப்பகுதியில் சீன நீர்மூழ்கிக்கப்பல்களும் போர் விமானங்களும் அடிக்கடி நடமாடுவது ஏன் என்று வினா எழுப்பினர். அதற்கு பதில் லியாங், இந்துமகா சமுத்திரம் பகுதியானது சர்வதேச சமுதாயத்திற்கு சொந்தமானது. இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறினார். சீனாவிடம் 300-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள் உள்ளன. இவைகள் அணுஆயுதங்களை ஏந்தி சென்று தாக்க வல்லது. தெற்கு சீன கடல் பகுதியானது சர்வதேச சமுதாயத்திற்கு சொந்தமானதாகும். இந்த பகுதி வழியாகத்தான் வர்த்தகம் தொடர்பாக உலக நாடுகளின் சரக்கு விமானங்களும் சரக்கு கப்பல்களும் அதிக அளவு சென்று வருகின்றன. அந்த கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்த பகுதியில் செயற்கை தீவை உருவாக்கி அதில் ராணுவத்தை சீனா நிறுத்தியுள்ளது. இதற்கு பிலிப்பைன்ஸ்,வியட்னாம் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனாவோ பாதுகாப்புக்காக செயற்கை தீவு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுவதோடு தென்னாப்பிரிக்காவுக்கு அருகிலும் ராணுவ தளத்தை சீனா நிறுத்தியுள்ளது.
இந்துமாக சமுத்திர பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களும் விமானங்களும் வந்து போவதற்கு இந்தியா பெரும் கவலை கொண்டுள்ளது. அதனால் இந்த பகுதியில் பாதுகாப்பை இந்தியா அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.