எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கனடா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டியில் 3 தங்க பதக்கங்கள் வென்ற கணேசனுக்கு ரூ.15 லட்சம், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற மனோஜூக்கு ரூ.11 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
கனடா நாட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 42 நாடுகள் கலந்து கொண்ட 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் குண்டு, வட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், மனோஜ் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய மூன்று நபர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அளவில் பெருமையை சேர்த்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் 36 பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதில் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கணேசன், நிலை-3 பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளில் தலா 1 தங்கபதக்கம் வீதம் மூன்று தங்க பதக்கங்கள், மனோஜ், நிலை-2 பிரிவில் ஈட்டி எறிதலில் 1 தங்க பதக்கம் மற்றும் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் தலா 1 வெள்ளி பதக்கம் வீதம் 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் செல்வராஜ், நிலை -1 பிரிவில் ஈட்டி எறிதலில் 1 தங்க பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர். அம்மா வழியில் செயல்படும் இந்த அரசுவிளையாட்டு வீரர்களை எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் விதமாக செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வீரர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்கள் மென்மேலும் பலசாதனைகள் புரிய, தங்க பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 3.லட்சம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 2. லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கவும் மேற்கண்ட விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஊக்கத் தொகையில், 15 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதனடிப்படையில், 3 தங்க பதக்கம் வென்ற கணேசனுக்கு ரூ.15 லட்சம், 1 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள்வென்ற மனோஜூக்கு ரூ.11 லட்சம் மற்றும் 1 தங்கம் வென்ற செல்வராஜூக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.31 லட்சம் உயரிய ஊக்கத் தொகையும் இவர்களின் பயிற்சியாளர்கள் ரஞ்சித் குமாருக்கு ரூ.3.90 லட்சம் மற்றும் சுந்தருக்கு ரூ.75 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் எதிர்காலத்தில் மேன்மேலும், பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைகள் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.