எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் முன்பட்டம் என்று சொல்லகூடிய டிசம்பர் – ஜனவரி மாதங்களில் தான் கரும்பு சாகுபடி 70 சதவீதத்திற்கும் அதிகமாக பயிரிடப்படுகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்குவதால் கிணறு மற்றும் நீர் நிலைகளில் நீர் இருப்பு இருக்கும். ஆதலால் பணப்பயிரான கரும்பு சாகுபடி எளிதாகிறது. மேலும் முன்பட்ட பருவ சாகுபடி செய்வதால் ஏற்படும் பலன்கள்.
1. கரும்பின் முளைப்பிற்கு இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கரும்பில் முளைப்புத்திறன் அதிகமாகிறது.
2. பருவமழை காரணமாக நட்ட மூன்று மாதங்களுக்கு நீர்பாய்ச்ச தேவையில்லை.
3. இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் அறவே இல்லை.
4. கிணற்றில் நீர் குறைந்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீர் பாய்ச்சி விதை கரும்பு ஆக வெட்ட வாய்ப்பு.
5. பயிர் பராமரிப்பு ஆட்கள் எளிதாக கிடைக்கும் வாய்ப்பு.
6. அடுத்த அரவைப்பருவத்தில் கரும்பை முன்னதாக வெட்ட வாய்ப்பு இருப்பதால் குறித்த காலத்தில் பணம், மற்றும் வெட்டு ஆட்கள் எளிதாக கிடைக்கும் அரிய வாய்ப்பு.
7. பண்டிகை காலமாதலால் கரும்பிற்கு தேவை அதிகம்.
சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு ஏற்ற இரகங்கள் : CO.0212, CO86032
நடவு முறைகள்:
1. கரணை மூலம் நடவு.
2. ஒரு பருச்சீவல்கள் மூலம்.
விதைக்கரணை தேர்வு :
1. 6 மாத கரும்பில் இருந்து மட்டுமே விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும்.
2. பூச்சிநோய் தாக்காத விதைகரும்புகளை தேர்வு செய்தல் வேண்டும்.
3. மறுதாம்புக்கரும்பில் இருந்து விதைக் கரணை தேர்வு செய்யக்கூடாது.
4. தொலைதூரம் எடுத்துச்செல்வதாய் இருந்தால் தோகை உரிக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
விதைக்கரணைகளின் அளவு:
1. கரணை மூலம் நடவு செய்ய 30,000 இருபருக்கரணைகள் / ஏக்கருக்கு
2. ஒரு பருச்சீவல்கள் மூலம் நடவு ( நீடித்த நவீன கரும்பு சாகுபடி) ஏக்கருக்கு 65௦௦ நாற்றுக்கள்.
கரணை நேர்த்தி: விதைக்கரணைகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பெவிஸ்டின், 5 மில்லி குளோர் பைரிபாஸ் 5gm சுண்ணாம்பு, 5 கிராம் யூரியா கலந்த கரைசலால் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும், பவிஸ்டின் பூஞ்சான நோய்களிலிருந்தும் குளோர் பைரிபாஸ் சாறு உறிஞ்சும் பூச்சிகளிளிருந்தும், சுண்ணாம்பு வறட்சியை தாங்கவும், யூரியா முளைப்புதிறனை கூட்டவும் உதவுகிறது.
நடவு முறை: 3 அடிக்கு ஒரு பார் பிடித்து கொண்டு கரணைகளை வயலில் தண்ணீர் பாய்ச்சியபின் பார்களின் பக்கவாட்டில் இருக்கும்படி பதித்தல் வேண்டும், கரணைகளை வாய்க்காலில் பதிக்கக்கூடாது, வாய்க்காலில் பதிப்பதால் மழைக்காலமாதலால் தண்ணீர் தேங்கி கரணை அழுகல் நோய் ஏற்பட ஏதுவாகி முளைப்புதிறன் பாதிக்கப்படும்.
களைக்கொல்லி தெளித்தல்: கரும்பில் முதல் மூன்று மாதங்கள் களைகளின் தாக்கம் அதிகமாகி பயிர் வளர்ச்சி குன்றிட வாய்ப்பாக அமைந்துவிடும். நட்ட 3 ஆம் நாள் களை முளைபதற்க்கு முன்பு தெளிக்கக்கூடிய களைக் கொல்லியான அட்ரசீன் என்ற களைக்கொல்லியை 1 kg எடுத்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்கப்பட்ட களைக்கொல்லி காலின் பாதத்தில் படாதவாறு பின்னோக்கி நடந்து தெளித்து வரவேண்டும். இது நட்ட 30 நாட்களுக்கு கோரை, அருகு தவிர அனைத்து களைகளையும் கட்டுபடுத்தும்.
அடி உரம்: மண் பரிசோதனைப்படி மட்டுமே உரமிடல் வேண்டும், மண்பரிசோதனை செய்ய இயலாத நிலையில் ஏக்கருக்கு 4 மூட்டை சூப்பர் பாஸ்பேட் உரத்தை பார்களின் சால்களில் தூவி நட வேண்டும். தொழுஉரம் ஏக்கருக்கு 5 டன் இடுதல், இரசாயன உரங்கள் பயிர் எடுத்துகொள்ள ஏதுவாவதுடன், மண்வளம் மேம்பாடு அடைகிறது.
உரப்பரிந்துரை : 110 : 25 : 45 தழை, மணி சாம்பல் சத்துகளை தரக்கூடிய உரங்களை 1 ஏக்கர் பயிருக்கு இடவேண்டும்.
களை எடுத்தல்: நட்ட 3௦ ஆம் நாள் ஏக்கருக்கு 1 மூட்டை யூரியாவை இட்டு லேசாக மண் அணைக்க வேண்டும், உடன் தண்ணீர் பாய்ச்சுதல் நல்லது.
இரண்டாவது களை எடுத்தல்: நட்ட 6௦ வது நாளில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா 1 மூட்டை பொட்டாஷ் உடன் வேப்பம் புண்ணாக்கு 5௦ kg கலந்து களை எடுத்து லேசாக மண் அணைக்க வேண்டும்.
மூன்றாவது களை எடுத்தல்: நட்ட 9௦ ஆம் நாள் 2 மூட்டை யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் ஏக்கருக்கு இட்டு நன்றாக மண் அணைத்தல் வேண்டும். இதற்கு மேல் தாமதப்படுத்தினால் போத்துக்கள் வளர்ந்து சர்க்கரை கட்டுமானம் பாதிக்கப்படும்.
வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த : எதிர்பாராத காரணங்களால் 2 மற்றும் 3 வது களை எடுக்க முடியாமல் போனால் வளர்ந்த களைகளை கட்டுப்படுத்த METRIBUZINE 1 KG + 2-4 D 600 gm கலந்து வளர்ந்த களைகளின் மீது தெளிப்பதால் களைகள் மட்டுப்படுத்தப்படும்.
தோகை உரித்தல்: நட்ட 5 வது மாதத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுபடுத்தவும், மகசூலை அதிகரிக்கவும், பின்பருவ நேர்த்திகளை செய்யவும் தோகை உரித்தல் அவசியமாகிறது. தோகைகளை கால்நடைத்தீவனமாகவும், கூரை வேயவும் பயன் படுத்தலாம்.
விட்டம் கட்டுதல்: 7 வது மாதத்தில் கரும்பு சாயாமல் இருக்க, எலி மற்றும் அணில் போன்றவற்றின் சேதத்தை தவிர்க்க விட்டம் கட்டுதல் அவசியம், கரும்பை வெட்டுவதும், வெட்டுக்கூலி குறையவும் வாய்ப்பு.
பயிர் வளர்ச்சி ஊக்கிகள்: கரும்பு நட்ட 45, 60, 75 நாட்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை 1, 1 ½ , 2 kg அளவுகளை 200 lit தண்ணீரில் கலந்து தெளிக்க மகசூல் 2௦ சதவீதம் கூடும்.
அறுவடை : நட்ட 11-12 மாதங்களில் கரும்பு அறுவடைக்கு வந்துவிடும். கரும்பை கைக்கோடாரி கொண்டு அடியோடு வெட்டுவதால் அடிக்கரும்பில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதால் ஆலையின் கட்டுமானம் கூட வாய்ப்பாகும், மேலும் 5 டன்கள் கரும்பு ஏக்கருக்கு மகசூல் கூட வாய்ப்பாக அமையும். கரும்பை வெட்டியபின் தோகையை தீயிட்டு எரிக்காமல், தோகைகளை கரும்பு தோகை கம்போஸ்டாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கலாம்.மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கரும்பு மகசூலை அதிகரித்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற வாழ்த்துக்கள்.
கோ.செந்தில்நாதன்,முனைவர் பா.கீதா, திட்ட ஒருங்கிணைப்பாளர்.
வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636203.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 23 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட