எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ; பங்கேற்று ரூ. 2 கோடியே 66 இலட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
மடிக்கணினி
ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 1973 விலையில்லா மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கிய பின்னர் இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது :-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 1973 மாணவ, மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் பங்கேற்று விலையில்லா மடிக்கணினிகளை வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே அனைவரும் உயர்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 6 ஆண்டுகளில் 65 புதிய கல்லூரிகளை தொடங்கப்பட்டது. 961 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டு 20 சதவீதம் அரசு கல்லூரியில் கூடுதலாக மாணவர்கள் சேருவதற்கு ஆணையிடப்பட்டு மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டது.
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடும்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்களின்; எண்ணிக்கை 100-க்கு 24.5 சதவிகிதம் மாணவர்கள் தான் சேருகிறார்கள். தமிழ்நாட்டில் 100-க்கு 44.30 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயிலும் நிலையை பெற்றுள்ளார்கள்;. தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் 20 ஆயிரத்து 106 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் 19 ஆயிரத்து 400 மாணவ, மாணவியர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டத்தில் தான் 96.82 சதவிகிதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் 11 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது அதில் 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் 3 உறுப்பு கல்லூரியும் அடங்கும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரியை அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றி முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இதனால் 19 ஆயிரம் கட்டணமாக செலுத்தி வந்த மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் ரூ. 2 ஆயிரம் மட்டுமே கட்டணமாக பெறப்படும்.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 335 மாணவ, மாணவிகளுக்கு ரூ.45 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், மொரப்பூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 132 மாணவ, மாணவிகளுக்கு ரூ.17 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், அரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 458 மாணவ, மாணவிகளுக்கு ரூ.61 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.23 இலட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் பொ.துறிஞ்சிப்பட்டி மேல்நிலை பள்ளிகளில் 356 மாணவ, மாணவிகளுக்கு ரூ.48 இலட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும், கடத்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் 284 மாணவ, மாணவிகளுக்கு ரூ.38 இலட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் மற்றும் சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலை பள்ளியில் 231 மாணவ, மாணவிகளுக்கு ரூ.31 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினியும் ஆக மொத்தம் 1973 மாணவ,மாணவியாகளுக்கு ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 96 மேல்நிலைப்பள்ளிகளில் படித்த 14 ஆயிரத்து 422 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 495 மதிப்புடைய விலையில்லா மடிக்கணினி ரூ.19.46 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 83 ஆயிரத்து 498 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.121.02 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுள்ளது. கிராமப்புறங்களிலுள்ள ஏழை எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்க்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா திட்டங்களை மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் கடின உழைப்பும் விடா முயற்சி செய்து படித்து பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று எதிர் காலத்தை சிறப்பாக அமைத்து கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட அரசு வழக்கறிஞர் பசுபதி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பொன்முடி, கூட்டுறவு சங்கத்தலைவர்கள் நல்லதம்பி, கோவிந்தசாமி, சிவபிரகாசம், பழனிசாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.