முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிக்கு சிறுபான்மை மக்கள் துணை நிற்க வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,டிச.4 - அதிமுக ஆட்சிக்கு எப்போதும் சிறுபான்மை மக்கள் துணை நிற்க வேண்டும் என்று மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.  மதுரை -ராமநாதபுரம் சிஎஸ்ஐ திருமண்டிலத்தின் கிறிஸ்துமஸ்விழா, கல்லூரி விடுதி திறப்பு விழா, நிறுவனர் நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று மதுரை சிஎஸ்ஐ நர்சிங் கல்லூரியில் நடந்தது. மதுரை திருமண்டில பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் தலைமை வகித்தார். சிஎஸ்ஐ துணை தலைவர் சி.ஆபிரகாம் இறை வேண்டல் செய்தார். பொருளாளர் ஜான் மகேந்திரன் வரவேற்றார். சிஎஸ்ஐ செயலாளர் வி.ஜேக்கப் வேதவாசிப்பு செய்தார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குத்துவிளக்கேற்றி வைத்து பேசியதாவது, கிறிஸ்தவர்கள் தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்வி சாலைகளை திறந்து கல்வியில் புரட்சி ஏற்படுத்தி உள்ளனர். தேர்தலில் எங்களுக்கு ஆதரவு வழங்கி வெற்றியை தேடி தருவதில் கிறிஸ்தவ மக்களின் பங்கு முக்கியமானது. இங்கே படித்தவர்கள் எல்லாம் தற்போது பல பதவிகளில்  உள்ளனர்.

   சேவை மனப்பான்மையோடு சேவை செய்பவர்கள் கிறிஸ்தவர்கள். தமிழக முதல்வர் அம்மா கூட 16 மொழிகளில் புலமை பெற்றவர். ஆங்கிலத்தில் அதிக திறமை படைத்தவர். அவரும் கிறிஸ்தவ சாலையில் படித்தவர். சிறுபான்மை மக்களுக்கு எப்போதுமே அதிமுக துணை நிற்கும். அவர்களின் கோரிக்கைகள் மற்றும் சலுகைகளை அம்மா நிறைவேற்றுவார். எனவே அதிமுக ஆட்சிக்கு சிறுபான்மை மக்களாகிய நீங்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியைகள் ஜான்சி சார்லஸ், யமுனாதேவி, ஜே.ஆர்.விஜயலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் எம்.ராஜபாண்டியன், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் எஸ்.டி.ஜெயபால், கவுன்சிலர்கள் சண்முகவள்ளி,கேசவபாண்டியம்மாள் உள்ளிட்ட ஏராளமாமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்