எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியம் மின் மீட்டரை குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கிறது என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மின் மீட்டர் கொள்முதல் செய்ததில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என மின்வாரியமும் விளக்கம் அளித்துள்ளது.
மின்மீட்டர் கொள்முதல் குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். மின்மீட்டர் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஸ்டாலின் எழுப்பியுள்ள புகார்களுக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு:-
ஒப்பந்தப்புள்ளி முடியவில்லை
மின்மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியே இன்னும் முடியவில்லை. அதற்குள் ஊழல் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை வழங்குகிறார். யார் பெயருக்கு கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டது என்று ஸ்டாலின் சொல்ல தயாரா? தொழிற்நுட்ப காரணங்களுக்காக ஒரு கம்பெனியின் டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட கம்பெனி நி்ர்வாகத்தினரே அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.
ஒப்பந்தப்புள்ளியில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. நேர்மையாக ஒப்பந்தப்புள்ளிகள் நடந்து வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் தவறான தகவல்களை வழங்குகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் 35 ஆயிரம் கோடி கூடுதல் கடனில் தள்ளியவர்கள் திமுகவினர். மின்வெட்டு இருட்டில் தள்ளிய தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், உபரி மின்சார உற்பத்திக்கு வித்திட்டார்.
தவறான தகவல்களை கூறுகிறார்
தி.மு.க. ஆட்சியில் இருந்த கடனில் பெரும்பகுதியை குறைத்து சாதனை படைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்படியிருக்க எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி மக்களை பீதியில் ஆழ்த்துகிறார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
பகிர்மானக்கழகம் விளக்கம்
இந்நிலையில், மின் மீட்டர் கொள்முதல் குறித்து ஒப்பந்த புள்ளிகள் வழங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் மின்வாரியத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தின் ஒருதலைபட்சமான குற்றசாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒருமுனை மின்மீட்டர் கொள்முதல் செய்ய கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் தகவல்கள் எதுவும் பெறப்படாமல் செய்திகள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அவப்பெயரை ஏற்படுத்த...
இந்த ஒப்பந்தப்புள்ளியில், விலைப்புள்ளி திறக்கப்பட்டு, விலை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலும் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படாத நிலையிலும் கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரச்சாரம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் உண்மை விவரம்
பின்வருமாறு:
மின்னணு ஒப்பந்தப்புள்ளி விவரக்குறிப்பேடு எண். 52/16-17-ல் 29.88 லட்சம் ஒருமுனை 5-20 ஆம்ஸ் நிலைத்த மின் அளவிகளை கொள்முதல் செய்ய கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்ட 13 ஒப்பந்தப்புள்ளிதாரர்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக விவரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி திறக்கப்பட்டது. 13 ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஏலத்தகுதி, தொழில்நுட்ப மற்றும் வணிக தகுதி ஆவணங்கள் ஆராயப்பட்டது.
விலைப்புள்ளி திறக்கப்படவில்லை
ஒப்பந்தப்புள்ளியின் தொழில்நுட்ப தேவைகளின்படி ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் கொடுத்த மாதிரி மின் மீட்டர்கள் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யாவிடில் அவர்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டு விலைப்புள்ளி திறக்கப்படமாட்டாது. கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் மற்றும் இதர 5 நிறுவனங்கள் மின்வாரிய தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே, அவர்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டு விலைப்புள்ளி திறக்கப்படவில்லை. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டவுடன்தான் அதன் தகவல் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
உண்மைக்கு புறம்பான செய்தி
113 ஒப்பந்தப்புள்ளிதாரர்களில் ஒப்பந்தப்புள்ளியின் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்த 7 நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் கடந்த 3-ம் தேதி திறக்கப்பட்டது. குறைந்த விலை சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிதாரருடன் விலை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் இந்த ஒப்பந்தப்புள்ளி ரூ.495-க்கு இறுதி செய்யப்பட்டதாகவும் அதனால் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி விளம்பரப்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
இதற்கு முன்னர் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் மின்மிட்டர்கள் ரூ.453-க்கு கொள்முதல் செய்ய ஆணைகள் ஜீன் 2017-ல், அதாவது மூன்று மாதத்திற்கு முன்புதான் வழங்கப்பட்டதால் தற்போது கோரப்பட்டுள்ள ஒப்பந்தபுள்ளியில் குறைவான விலை சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிதாரருடன் மேற்கண்ட விலைக்கு சமமாக குறைத்து கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி மேற்கண்ட விலை பெறாவிடில் இறுதி செய்யப்படமாட்டாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.