எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர் மாவட்ட நன்னிலம் வட்டம் ஆண்டிபந்தல் ஊராட்சியில் 64 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு ரூ.3 கோடியே 18 லட்;சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் முன்னிலை வகிக்க, மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தலைமை வகித்தார்.
கடனுதவி
உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு ஏழை, எளிய சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறது.விவசாயிகளின் பாதுகாவலராகவும் திகழ்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி,குடவாசல், நன்னிலத்தில் கல்லூரி வழங்கி மாணவ,மாணவிகளின் கல்லூரி படிப்புக்கு வழிகாட்டிய அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு. தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியீட்டு வெற்றி கண்டவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா ஆவர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிர்க்காப்பீட்டு தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்திட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2016 – 2017 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 286 விவசாயிகளுக்கு ரூ.163 கோடியே 29 லட்சம் குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நகைக்கடனாக 43 ஆயிரத்து 115 விவசாயிகளுக்கு 87 கோடியே 68 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவோர் கடனாக 225 நபர்களுக்கு ரூ.54 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2017-2018 நிதியாண்டில் தற்போது வரை 27 ஆயிரத்து 254 விவசாயிகளுக்கு குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.107 கோடியே 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடனாக 25 ஆயிரத்து 540 விவசாயிகளுக்கு ரூ.56 கோடியே 19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் தொழில் முனைவேர் கடனாக 51 நபர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுயஉதவிக்குழு கடன் , பண்ணைசாராக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், சிறுவணிகக் கடன் போன்ற பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 137 கூட்டுறவு கடன் சங்கங்களில் தமிழகத்திலேயே எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 130 கூட்டுறவு கடன் சங்கங்கள் முழுவதுமாக கணினிமயமாக்கபட்டுள்ளது.
எனவே கூட்டுறவுத்துறையானது சாதாரண மக்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், வாழ்வில் பின் தங்கியுள்ளவர்களின் சமூக பொருளாதார நிலை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இன்றையதினம் 948 நபர்களுக்கு 3 கோடியே 18 லட்சம் மதிப்பிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கடனுதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார். முன்னதாக கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி,கட்டுரைப் போட்டியில் , ஒவியப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சிறந்த முறையில் சேவையாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும் உணவுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சங்களின் துணைத்தலைவவரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆசைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ரமணிதேவி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைத் தலைவர் ஆர்.கே.பி.விஸ்வநாதன், திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் அர்ச்சுணன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய துணைத்தலைவர் சி.பி.ஜி.அன்பு, நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராமகுணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட