எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 12 - முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்காது என்ற நிலையை வலியுறுத்துவதற்காக சிறப்பு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 15-ம் தேதி கூட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முல்லைப்பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் விஸ்வரூபமெடுத்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பின்னர் அணையை வலுப்படுத்தும் பணியை தமிழகம் மேற்கொண்ட பின்னர் மத்திய நீர் ஆணையம் திருப்தியடைந்ததும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் கேரள அரசோ இந்த ஆணையை முடக்கும் வகையில் அப்போதிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையின் விளைவாக கேரள அரசின் 2006-ம் ஆண்டின் சட்டதிருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்டம் மற்றும் அரசமைப்பு ரீதியான விஷயங்களை தவிர ஏணையவற்றை பரிசீலிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த தலைமையில் அதிகாரம் படைத்த குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நிறுவியது. அந்த குழு தனது விசாரணையை ஏறக்குறைய முடித்துவிட்டு உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையை தரக்கூடிய நிலையில் கேரள அரசு தன் பழைய நிலையான புதிய அணையை கட்டும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்ததுடன் சமீபத்தில் அம்மாநில சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது. அதோடு முல்லைப்பெரியாறு அணையின் பகுதி நிலநடுக்க பிராந்தியமாக இருப்பதாகவும், அதனால் அணைக்கு புதிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அது இடிந்து விட்டால் பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் வீணான வதந்திகளை கேரள அரசு பரப்பி வருகிறது. இதனால் அணையின் கேரள பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. பலர் அதை இடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இதையொட்டி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய படையை அப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் கேரளம்- தமிழகம் நலன் கருதி எந்தஒரு பிரிவினை சக்திக்கும் இடம் தரக் கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையொட்டி நேற்று முன்தினம் கூடலூர் பகுதியில் எல்லைச் சாவடிகளை கேரளா மூடியது. எல்லைச் சாவடி பகுதிகளுக்குள் தமிழகத்திலிருந்து பொதுமக்கள் நுழைந்தால் கண்டதும் சுடவும் கேரள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் கேரளாவிற்குள் நுழையும் நடவடிக்கையில் இறங்கினர். அவர்களை தேனி மாவட்ட ஆட்சியரும், போலீசாரும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். முல்லைப்பெரியாறு பகுதியில் உள்ள பதற்றத்தால் கடந்த 7 நாட்களாக நின்றிருந்த வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும், போதிய போலீஸ் பந்தோபஸ்து அளிக்கவும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நடவடிக்கை எடுத்துள்ளார்.கேரள மாநில அரசு இப்படி பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கினாலும் தமிழக தரப்பில் மிகவும் பொறுமை காத்ததுடன் கொந்தளித்துள்ள பொதுமக்களை சமாதானப்படுத்தி அமைதி காத்திடும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதாவும், உயர் அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் தமிழக உரிமைக்காக உள்ளனர் என்பதை எடுத்துக் காட்ட சிறப்பு சட்டமன்றத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீnullதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீnullதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சnullநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது. அதன் விளைவாக, எப்பொழுதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து, நியாயமாக நடந்து கொள்ளும்படி நான் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறேன். நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். நமது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பிரச்சனை குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம். இம்மாநிலத்தில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமோ அல்லது யாருக்கேனும் பாதிப்பு இருந்தால், நானும் எனது தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக உதவிக் கரம் நீnullட்டி நடவடிக்கை எடுப்பதில் முதலாவதாக இருப்போம். இப்பிரச்சனையில், எனக்கும் தமிழக மக்களுக்கும், கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மீது எந்தவித விரோதமும் இல்லை. கேரள மக்களுக்கும், எங்களுக்கும் எந்தவித சச்சரவும் இல்லை. எனவே, அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. இப்பிரச்சனையை விஞ்ஞான ரீதியாகவும், தர்க்கnullர்வமான முறையிலும் கையாள உங்களது அரசை அனுமதிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இச்சூழ்நிலையில், இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், 15.12.2011 அன்று காலை 11.00 மணிக்கு ஒரு சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும். இந்தக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும் பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்3 days 6 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.