எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி -தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் சமூகநலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,935 பயனாளிகளுக்கு ரூ.11.71 கோடி நிதியுதவி, திருமாங்கல்யத்திற்கு ரூ.6.53 கோடி மதிப்பிலான தங்க காசுகளை வழங்கினார்.
விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் பேசும்போது தெரிவிக்கையில்,
ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு தமிழக மக்கள் வாழ்விற்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நீண்ட காலத்திற்கு பயன்தரும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு ஏற்படுத்தி திட்டங்களின் பயன் நேரடியாக பொதுமக்களை சென்றடையும் வண்ணம் திறம்பட செயல்படுத்தி வருகிறது. மேலும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்படி, கருவுற்ற காலங்களில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டு, கர்ப்பிணித்தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு, டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ.12,000ஃ-மாக வழங்கப்பட்ட வந்த நிதியுதவியினை தற்போது ரூ.18,000 மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பெண் சிசு கொலையை முற்றிலும் தடுப்பதற்காக 1991-ஆம் ஆண்டு தொட்டில் குழந்தை என்னும் சீரிய திட்டத்தை மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தினை அன்னை தெரசா அவர்கள் நேரடியாக அம்மா அவர்களின் இல்லத்திற்கு வந்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் வரப்பெற்ற குழந்தைகள் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி நல்ல நிலையில் உள்ளனர்.
பெண்களின் திருமணம் ஏழ்மையின் காரணமாக காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பெண்கல்வியை ஊக்குவிப்பதற்காகவும், குடும்பத்தில் திருமணத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை போக்குவதற்காகவும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 - நிதியுதவியும், 4 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000ஃ- நிதியுதவியும், 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்ததை 2016-ஆம் ஆண்டு மேம்படுத்தி ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்கள். அதனைத்தொடர்ந்து இத்திட்டத்தினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பதின் அடையாளமாக தற்போது பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு 1,185 பயனாளிகளுக்கு ரூ.2.96 கோடி நிதியுதவியும், 9,480 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு 1,750 பயனாளிகளுக்கு ரூ.8.75 கோடி நிதியுதவியும், 14,000 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்ப்பிணி பெண்களின் மனம் மகிழ்ச்சியடைவதற்காகவும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உடல்நலம் சிறப்பாக பேணிக்காத்திடவும் சமுதாய வளைகாப்பு திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்த தமிழக அரசு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு பெண்களுக்கு விலையில்லா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 24.02.2018 முதல் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளது. ஆண்களுக்கு பெண் நிகரானவர்கள் என்பதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற பெண்கள் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் பயன்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் , கம்பம் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.டி.கே.ஜக்கையன் , மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ச.தங்கவேல் அவர்கள், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கிருஷ்ணவேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.