எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி,- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் வந்த 36 பேர்களில் கொழுக்குமலைக்கு கீழே உள்ள ஒத்தமரத்தடியில் காட்டு தீயில் சிக்கி பலியான 18 பேர்கள் இறந்த பகுதிகளை சிறப்பு அதிகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, ஈரோடு, கோயமுத்தூரை சேர்ந்த 36 பேர்கள் போடி வழியாக குரங்கணியிலிருந்து ட்ரெக்கிங் என்ற மலை ஏறும் பயிற்சியாக நடந்து டாப்டேஷன் மூணாறு வந்தடைந்தனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு 3 ஜீப்புகளில் தேவிகுளம், முட்டுகாடு, சின்னகானல், சூரியநல்லி வழியாக கொழுக்குமலை வந்தடைந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார்கள்.
பிறகு மறுநாள் 11-ம் தேதி கிளம்பியவர்கள் சரியாக சுமார் 2 மணியளவில் ஒத்தமரம் வந்தடைந்து மதிய உணவு அருந்தி விட்டு சுமார் 3.30 மணியளவில் நடக்க துவங்கினார்கள். ஏற்கனவே கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக குரங்கணி மலை பகுதிகளில் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து ஒத்தமரப்பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் அளவில் தீப்பற்றி எரிந்தது. அந்த தீயிலிருந்து தப்பிப்பதற்காக 36 பேர்களும் நாலா பக்கமும் தெறித்து அங்கும் இங்கும் ஒடி பள்ளங்களில் உருண்டு தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி மாட்டி கொண்டனர். குரங்கணியை சேர்ந்த ராஜேஸ் என்ற வழிகாட்டி 10 பேர்களை அழைத்து கொண்டு வேறு பாதையில் தப்பித்து விட்டார்.
இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் தலைமையில், தேனி எஸ்.பி பாஸ்கரன், போடி டி.எஸ்.பி பிரபாகரன் ஆகியோர் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலேயே 9 பேர்கள் பலியாகிவிட்டனர். தீயில் கருகியும் கை கால்கள் உடைந்தும் தப்பிய 27 பேர்களை மீட்டு தேனி, மதுரை, கோவை, ஈரோடு மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வரையில் பலி எண்ணிக்கை 18 உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை, முதன்மை செயலர் அதுல்யாமிஸ்ரா ஐ.ஏ.எஸ் விசாரனை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் தீவிபத்து குறித்து விசாரணை செய்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் அதுல்யாமிஸ்ரா தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரமாக அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 22-ம் தேதி காலையில் 7 மணிக்கு குரங்கணியிலிருந்து ஆய்வு துவங்கும் என அறிவித்தார். அதன்படி நேற்று காலை 6.40 மணிக்கு சிறப்பு அதிகாரி குரங்கணிக்கு கலெக்டர் பல்லவிபல்தேவ், போடி டி.எஸ்.பி பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர், வனத்துறையினர்கள் வந்தடைந்தனர். குரங்கணியில் இருந்து காலை 7 மணியளவில் ஒத்தமரம் மலை பகுதி நோக்கி செங்குத்தான மலையில் 7 கிலோ மீட்டர் நடந்து சென்றடைந்தார். தீவிபத்தில் சிக்கிய 36 பேர்களும் உணவு அருந்திய இடம், தீப்பற்றி பரவிய இடம், தப்பிப்பதற்காக சிதறி ஓடி உருண்டு விழுந்த பள்ளம், பிணங்களை அடுக்கி வைக்கப்பட்டு ஹெலிகாப்ட்டரில் மீட்டெடுத்து சென்ற ஒத்தமரம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்விற்கு பின்னர் அதுல்யாமிஸ்ரா கூறுகையில்,
9 பேர்கள் தீயில் கருகி பலியான மற்றும் ஒத்தமரப்பகுதிகளை பார்வையிட்டுள்ளேன். தொடர்ந்து அவர்கள் கொழுக்குமலையில் தங்கியிருந்த தனியார் விடுதி பார்த்து விட்டு பின்னர் மூணாறு, டாப்டேஷன் வரை சென்று பார்வையிட்டு இரவிற்குள் போடி திரும்பி விடுவேன். மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை போடி நகராட்சி அலுவலகத்தில் தீவிபத்து நிகழ்ச்சி பற்றிய சிறப்பு விசாரனை அலுவலகம் திறக்கப்படும். அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்களிடமிருந்து ஆடியோ, வீடியோ பதிவுகள், அவர்களும் உரையாடிய பதிவுகள், கிராம மக்கள் அவர்களின் உயிர்களை பணையம் வைத்து தீயில் கருகியவர்களை காப்பாற்றி உள்ள நிகழ்வு பதிவுகள் என எது இருந்தாலும் நேரில் வந்து தெரிவிக்கலாம், ஆதாரங்களை தரலாம் இறந்து போனவர்களின் சொந்த ஊர்களுக்கே நேரில் சென்று விசாரிக்க இருக்கிறேன் என்றார்.
தீ விபத்து நடந்த ஒத்தமரம் பகுதியில் ஆய்வு செய்த பின்னர் அதுல்ய மிஸ்ரா கொழுக்குமலையில் இருந்து கேரள மாநிலம் வழியாக தமிழக எல்லையான டாப்ஸ்டேசன் சென்றார். அங்கிருந்து மீண்டும் மலைப்பாதை வழியாக நடந்தே குரங்கணி வந்தடைந்தார். அதுல்யமிஸ்ராவுடன் தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் உதயன், மதுரை மண்டல வனப்பாதுகாப்பு அலுவலர் ராகேஷ்குமார், தேனி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மேகமலை வனச்சரணாலய அலுவலர் ராம்மோகன், மாவட்ட வன அலுவலர் கந்தசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேலு, வன ஆர்வலர் டாக்டர் என்.ஆர்.டி.ராஜ்குமார், போடி டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர். தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் குரங்கணி, கொழுக்குமலை, டாப்ஸ்டேசன் ஆகிய இடங்களில் விசாரணைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 12 hours ago |
ஸ்வீட் பால்.4 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 17 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.