எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் ஒராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் பேசியதாவது:
மூன்று அதிர்ச்சிகள்
இந்த ஓராண்டு சாதனையில் மக்களுக்கும், விசுவாசத் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி. நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி. அதுவும் மூன்று அதிர்ச்சிகள். ஜெயலலிதா கடும் உழைப்பால் உருவாக்கிய நல்லாட்சியை, அவரது மறைவுக்கு பின், அம்மாவின் விசுவாசத் தொண்டர்கள் சிந்தாமல், சிதறாமல் கட்டிக் காத்து ஓராண்டைக் கடந்து விட்டார்களே என்பது முதல் அதிர்ச்சி. ஜெயலலிதா வகுத்துத் தந்த திட்டங்களை எல்லாம் குன்றாமல், குறையாமல் நிறைவேற்றி, பல சாதனைகள் படைத்து வருகிறார்களே என்பது இரண்டாவது அதிர்ச்சி. எதிர்ப்புகளை முறியடித்து, துரோகங்களை துவம்சம் செய்து, தங்கு தடையின்றி, பொங்கும் வெள்ளம் போல, ஐந்து ஆண்டுகளையும் நிச்சயம் நிறைவு செய்து விடுவார்கள் என்பது மூன்றாவது அதிர்ச்சி.
பல விருதுகள்...
துரோணாச்சாரியாரிடம் பாடம் கற்ற அர்ஜுனன் போலஜெயலலிதாவிடம் பாடம் கற்ற அர்ஜூனர்கள் நாங்கள். எம்.ஜிஆர் ஒரு திரைப்படத்தில் பேசுவதை போல நாங்கள் வைக்கும் குறி தப்பவே தப்பாது். நாங்கள் வைக்கின்ற குறியெல்லாம், தமிழ் நாட்டைமிக உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதுதான். அம்மா அரசு செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதற்கு நேரம் போதாது. அம்மா அரசு பெற்ற விருதுகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கும் நேரம் போதாது. தமிழக மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படும் விதமாக விருதுகளை நாம் குவித்திருக்கிறோம். இப்படி அம்மாவின் அரசு, அடுக்கடுக்காய் விருதுகளை சம்பாதித்து வருவதைத்தான், சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தாய்மார்களின் உடல் உழைப்பை குறைத்து நிம்மதி. நிறைந்த ஓய்வு தர வேண்டும் என்பதற்காகத்தான் இல்லத்தரசிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி கொடுத்தார் ஜெயலலிதா. அதை இந்த அரசு,இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கருணைக் கரம் நீட்டி, அம்மாவின் ஆட்சி வழங்குவதுதான் மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி. எதிர்கட்சினர் நமக்கு எதிராக தொடுத்த அத்தனை அஸ்திரங்களையும், தர்மத்தின் வழியிலே, சத்தியத்தின் வழியிலே, அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள் தகர்த்தெறிந்தோம். எதிர்கட்சியினர் என்ன விமர்சனம் செய்தாலும்,நாங்கள் கவலைப்படவும் இல்லை. கலங்கவும் இல்லை.
எந்த பயமும் இல்லை
எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படுவதும், கலங்கி நிற்பதும் எதிர்கட்சினர்தான். எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும், லட்சியங்களையும் நிறைவேற்றி யாராலும் அசைக்க முடியாத எஃகுக் கோட்டையாக நமது கழகத்தை மாற்றியவர்,ஜெயலலிதா அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் நம்முடைய ஒன்றரைக் கோடிவிசுவாசத் தொண்டர்கள். அதிமுக , இயக்கத்தை கபளீகரம் செய்வதற்கு, சில கழுகுகள் பறந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா புகழ்பாடும் விசுவாசத் தொண்டர்களும், அம்மா அவர்களை உயிராக நினைக்கும் விசுவாசத் தொண்டர்களும் இருக்கும் வரை,நமது இயக்கத்தைஎந்தக் கொம்பனாலும்தொட்டுக் கூட பார்க்கமுடியாது. இப்போது, புதிது புதிதாக சிலர் வந்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் கஷ்டத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாதவர்கள் சிஸ்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அடங்கிப்போய்....
அம்மா ஆண்ட நாட்டை, விசுவாசத் தொண்டர்கள்தான்ஆள வேண்டும் என்று, தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். காரணம், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகும், இந்த அரசு, அம்மாவின் அரசாகவே முதல்வர் எடப்பாடி. பழனிசாமி தலைமையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் வழியிலே, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, இந்த ஆட்சி நிலைக்காது, நீடிக்காது என்று, பரபரப்பாக பேசியவர்களும், அடுக்கடுக்காக அறிக்கைகள் விட்டவர்களும், ஆரூடம் கூறியவர்களும், ஆடி அடங்கிப்போய் விட்டார்கள். பூனைகள் கூடி யானையை அசைத்துப் பார்த்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் தமிழ் நாட்டை மேலும், மேலும் உயர்த்திட தர்மத்தின் பாதையில் நடப்பவர்கள். ஜெயலலிதாவின் பாதையில் நடப்பவர்கள்.
மீண்டும் ஆட்சி அமைக்கும்
தன்னலம் கருதாது, உடல் நலம் பாராது ஓய்வில்லாமல் உழைத்து, உழைத்து தமிழகத்தின் எட்டுத் திசைகளிலும் சுற்றிச் சுழன்று, மக்களைச் சந்தித்து, 32 ஆண்டு கால வரலாற்றை உடைத்து ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற புதிய வரலாற்றை உருவாக்கி மகத்தான வெற்றி பெற்று, ஜெயலலிதாஅமைத்துக் கொடுத்த ஆட்சி, இந்த ஆட்சி. இந்த ஆட்சிக்கு ஊறு செய்திடலாம் என்று நினைப்பவர்களை, ஒரு நாளும் நாங்கள் விட மாட்டோம். எங்களை வெல்ல நினைக்கும்எதிரிகளையும் விட மாட்டோம். குழி பறிக்க எண்ணும் துரோகிகளையும்நாங்கள் விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.