முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசி பத்திரிகை கேட்டு துப்பாக்கியால் சுட்ட பா.ஜ. தலைவர்மகன்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

ஆக்ரா,ஜன.- 5 - படிக்க ஓசி பத்திரிகை கேட்டு தராததால் ஆத்திரம் அடைந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகன் சுப்பாக்கியால் சுட்டதில் விற்பனையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல் வந்துவிட்டால் ஒரு சிலர் இனாம் கேட்பாளர்கள். அதுவும் கடைக்காரர்களிடம்தான் அதிகம் கேட்பார்கள். ஆனால் பத்திரிகை விற்பனையாளர் ஒருவரிடம் படிக்க ஓசி பத்திரிகை கேட்டு அவர் தர மறுக்கவே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் எல்லாரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதுவும் ஒரு சாதாரண மனிதன் ஓசி கேட்டால் பரவாயில்லை. ஒரு பெரிய கட்சியின் தலைவர் மகனே இந்த விபரீத சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பாரதிய ஜனதா தலைவர் ராணா பிரதாப். இவருடைய மகன் விகாஸ். சம்பவத்தினத்தன்று 22 வயது இளைஞர் ராம் குமார் வழக்கமாக புகழ் பெற்ற ஆக்ரா நகரில் உள்ள ஒரு பகுதியில் பத்திரிகை விற்று வந்துள்ளார். அவரிடம் விகாசும் அவரது நண்பர் அஜித்தும் வந்து ஓசி பேப்பர் கேட்டுள்ளனர். அதற்கு ராம் குமார் மறுத்து உள்ளார். உடனே விகாஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் நெஞ்சில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். உடனே ராம்குமார், ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ராம்குமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்