முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை முயற்சி: ஆவணங்கள், பணம், நகை கொள்ளையா?

புதன்கிழமை, 9 மே 2018      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்,  மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த வழக்கில் கைதாகியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் நேற்று கொள்ளை முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டதை அடுத்து இது தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியா நகரில் உள்ள நிர்மலா தேவி வீட்டில் நேற்று திருட்டு முயற்சி நடந்துள்ளது. போலீசார் சீல் வைத்துள்ள அந்த வீட்டில் பின்பக்க வழியாக திருட முயற்சி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயுள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து