எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்;சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் உணவு பாதுகாப்பு குறித்த “மேளா மே மாதம் முழுவதும்” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, முன்னிலையில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு குறித்த கண்காட்சியினை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திறந்து வைத்து தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு கோடை காலங்களில் தேவையான உணவை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனைப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் ஒருமாதம் காலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பிள்ளையார்பட்டியில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் நான்கு வாரங்களுக்கு பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம் கோடை காலத்தில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். அதுமட்டுமின்றி தேவையற்ற உணவுகளை இக்காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடாது என்பதன் குறித்து பொதுமக்களிடம் இதன் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் கோடை காலத்தில் ஒவ்வொருவருக்கும் நீர்ச்சத்தும் மற்றும் உப்புச்சத்துமே அதிகளவு தேவைப்படுவதாகும்.
பொதுவாக உணவுக்கூடங்களில் தயாரிக்கும் உணவுகளை கலப்படமின்றி தயாரித்து தூய்மையாக பாதுகாத்து விநியோகிக்க வேண்டும். அதேபோல் பழச்சாறு தயாரிக்கும் மையங்களில் தன்சுத்தம், கைசுத்தம் பேணுகின்ற வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பால், தண்ணீர் மற்றும் பழங்கள், குளிர்பானம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் தரமான பொருளாகப் பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் விற்பனைக்கு வழங்கும் பொருட்களை சுத்தமாகவும் தரமாகவும் வழங்கினால்தான் பொதுமக்களுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது. அதுமட்டுமின்றி கலப்படமான பொருட்கள் விற்பனையில் இருப்பது கண்டறியப்பட்டால் அலுவலர்களின் கவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். அலுவலர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக தன்னார்வலர்களாக பணிபுரிய பயிற்றுவிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்று உணவு வணிகர்கள்; பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான உணவை எவ்வாறு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான உணவை அறிந்து எவ்வாறு பயனடைய வேண்டும் என்பது குறித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். துறையின் சார்பாக துறை நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாதுகாப்பான உணவு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக மொபைல் கார்ட் மற்றும் சாலையோர வியாபாரிகள், உணவகங்கள், உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள் குறித்தான நலக்கல்வி, உட்கொள்ள வேண்டியவை, உட்கொள்ள வேண்டாதவை எப்பொழுது பழச்சாறுகள் அருந்த வேண்டும் அவை எப்படிபட்டவையாக இருக்க வேண்டும் எந்த அளவுள்ள குளிர்பதன நிலையில் அருந்த வேண்டும் எனபது குறித்ததான ப்ளக்ஸ் போர்;டுகள், கூடாரங்கள், உணவு பாதுகாப்பு புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ்அப் எண்: 9444042322 ஆகியவை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உருவாக்க உள்ளனர். மேலும் இத்துறையின் சார்பாக ஸ்டால்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு மாதிரிகள் எது என்று தரம்பிரித்து விளக்கி காண்பிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்வதுடன் ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பாதுகாத்திட வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ஜெகதீஸ் சுந்தரபோஸ், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், ரமேஷ், செல்லத்துரை, தியாகராஜன், ராஜேஸ்,முத்தமிழ், சாலைப்பாண்டியன், ஜோதிபாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைவு
01 May 2024சென்னை : 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.
-
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
01 May 2024ஈரோடு : சத்தியமங்கலம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி
01 May 2024புதுடெல்லி : போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.