எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நல்லவேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்க்கில் இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.
தற்போது மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி என்பது தான் பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படை என்னும் நிலை உருவாகியுள்ளது. பணிவாய்ப்புக்குரிய கல்வித் தகுதிகளைத் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, கலை அறிவியல் கல்வி, சிறுதொழில் கல்வி எனப் பலவாறாகப் பிரிக்கலாம்.
தொழிற்கல்வி
மருத்துவம், பொறியியல், வோளண்மை, சட்டம் முதலியவை தொழிற்கல்வித் துறைகள், மேல்நிலைக் கல்வியில் உயர்மதிப்பெண் பெற்றோர் அந்தந்தப் பாடப் பிரிவின் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம்.
இவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுக் கல்லூரிகளில் சேர்ந்து உரிய காலத்தில் படித்து முடிப்பர். படித்து முடித்தவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணிபுரியும் வாய்ப்புண்டு.
தற்போது உயிரி தொழில்நுட்பத்துறை, நுண்ணியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிற் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வேதியியல், விலங்கியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கும் சுற்றுச்சூழல், வேளாண்மை, மருத்துவம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் சிறந்த வேலைவாய்ப்புத் துறையாக தற்போது இது விளங்கி வருகிறது.
தொழில்நுட்பக் கல்வி
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், தாம் பெற்ற உயர் மதிப்பெண்களுக்கு பல் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பயிலலாம். பொறியியில் துறையில் உள்ளது போலப் பல்வேறு துறைகள் இதிலும் உண்டு. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கும் இக்கால கட்டத்தில் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்புண்டு.
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி இரண்டாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேரலாம். மேலும் செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
கலை, அறிவியல் கல்வி
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப் பதிவியல், கணிப்பொறியியல், வணிகவியல் போன்ற பிரிவுகளில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் அதன்பின்னர் முதுகலைப் பட்டமும் பெறலாம்.
பின் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து இளம் கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியர் பணியைப் பெறலாம். தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடுவண் அரசுத் தேர்வாணையம், வங்கித் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, தொடர் வண்டித்துறை முதலிய துறைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுப் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
இதற்கான தகவல்களை நாளேடு, வானொலி, தொலைக்காட்சி, முதலிய ஊடகங்களின் மூலம் பெற்று முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்தும் வேலை வாய்ப்புக்களைப் பெறலாம்.
சிறுதொழில் கல்வி
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், பெறாதவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு அல்லது ஈராண்டு பயிற்சிப் பெற்றுப் பணியில் சேரலாம்.
இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் கம்மியர், கடைசல் பிடிப்பவர் கட்டட வரைவாளர், நில அளவையாளர், தச்சர், படிப்புகளும், இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி, கைபேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன. அவரவர் விருப்பத்திற்கேற்பச் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
இராணுவம், காவல்துறைப் பணி
பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் இராணுவம், காவல் முதலிய துறைகளில் சேர்வதற்கு வாய்ப்புண்டு. இவற்றில் சேர முதலில் உடற்கூறுத் தேர்வு நடைபெறும். அதன் பிறகு எழுத்துத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே பணியில் சேர இயலும்.
ஓட்டுநர், நடத்துனர் முதலிய பணிகளுக்கு உடற்கூறு தகுதியுடையவர்கள் மட்டுமே சேர இயலும். மக்கள் நலப் பணியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகளிலும் சேரலாம். இப்பணி குறித்த தகவல்கள் அவ்வப்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் ஊடகங்களில் வெளியிடப்படும்.
அரசுப் பணிக்காக காத்திராமல் அவரவர் சுயதொழில் தொடங்கிப் பலரும் வேலை வாய்ப்பைப் பெருக்க வேண்டும். அப்பொழுதுதான் வேலையில்லா நிலை மாறும். சுயதொழில் தொடங்குவதற்கு வழிகாட்டுதல்கள், பயிற்சிகள், கடனுதவிகளை அரசு அளிக்கிறது.
அவற்றைப் பெற்றுச் செயல்படுத்துவதற்கான மனத்துணிவும், முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும் அத்தகையோர் நூற்றுக் கணக்கானோருக்கு வேலை அளிக்கலாம் அவர் வேலைக்காக காத்திருக்கவேர் ஏங்கவோ தேவையில்லை.
வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்பதற்கேற்ப தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல வேலையை அனைவரும் பெறலாம். தன்னம்பிக்கையுடன் நமக்கேற்றவேலைவாய்ப்பினைப் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன்தரும் வகையில் வாழ்வோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.