எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தமிழகத்திற்கு என்னென்ன தேவை என்பதை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன் என்று டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 4-வது நிர்வாக குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.
2022 திட்டத்திற்கு ...
நான்காவது நிதிஆயோக் கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம். அம்மாவின் 2023 தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி திட்டமாக விளங்குவதாக கருத்தில் கொண்டு, அதை இந்தியாவிற்கான 2022 திட்டத்திற்கு வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அதேபோல, விவசாயிகள் வளம்பெற நவீனமுறையில் வேளாண் விற்பனைக் கூடங்களை மேம்படுத்த கூடுதல் நிதி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் பழங்களை பெருநகரங்களில் நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக போக்குவரத்து வசதி உள்ளிட்ட உரிய கட்டமைப்புகளை உருவாக்கிட நிதி வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.
அனைவருக்கும் நல்வாழ்வு...
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம். மக்கள் நல்வாழ்வுத் துறையில் “அனைவருக்கும் நல்வாழ்வு” என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் புதிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து அதிக மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் ஊட்டச்சத்து மற்றும் தடுப்புப்பூசி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவக் கல்லூரி ...
இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மத்திய அரசால் வளர்ச்சி நோக்கி செல்லும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல, விருதுநகர் மாவட்டத்திலே, பல்மருத்துவமனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பல்மருத்துவமனையினை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
துரித நடவடிக்கை...
அனைத்து அதிகாரம் படைத்த காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைப்பதற்கான அறிக்கை வெளியிட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து, இவ்விரு அமைப்புகளும் உடனடியாக செயல்படுத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். 15-வது நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை கணக்கில் கொண்டு நிதி பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழ்நாடு மக்களின் நலனிற்கு எதிராக அமையும் என்பதால், நிதி பங்கீட்டை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கணக்கில் கொண்டு வழங்கிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கின்றோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை எல்லாம் வைத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், விளக்கமாக தமிழ்நாட்டிற்கு என்ன என்ன தேவை என்பதை பிரதமரிடத்திலே வழங்கியிருக்கிறோம்.
கேள்வி: பிரதமர் தனியாக சந்தித்து பேச முடிந்ததா. குறிப்பாக காவேரி விவகாரமாக இருக்கட்டும், கிடைக்க வேண்டிய நிலுவை தொகையாக இருக்கட்டும், இதுமாதிரியான விஷயங்கள் குறித்து தனியாக பேச முடிந்ததா?
பதில்: தனியாக பேசினோம். பிரதமர் அவர்கள் கூட்டம் முடிந்துவிட்டு வரும்போது, அவரிடத்திலே தமிழ்நாட்டினுடைய நிலைமையை எடுத்து கூறியிருக்கின்றோம். தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுயிருக்கின்றோம்.
கேள்வி: பிரதமர் ஏதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கிறாரா?
பதில்: அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.
கேள்வி: ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பிரதமர் உங்களிடம் ஏதேனும் கேட்டாரா?
பதில்: ஏற்கனவே விசாரணையில் இருக்கிறது.
கேள்வி: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநிலம் தற்போது வரை உறுப்பினர்கள் பெயர் ஏதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்தினீர்களா?
பதில்: இது தொடர்பாக கூட்டத்திலே பேசியிருக்கின்றேன். விரைந்து குழு அமைத்து, அந்த குழு முதல் கூட்டத்தை கூட்டி, தமிழகத்திற்கு தேவையான நீர் திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.
கேள்வி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீங்கள் நேரில் போகவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டு நாட்களாகவே இருந்து வருகிறது.
பதில்: அதாவது எங்களுடைய துணை முதலமைச்சர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேரடியாக போய் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனை வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்ற அனைவருமே தினந்தோறும் எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொண்டு வருகிறார்கள். அந்த மாவட்ட அமைச்சர் பலமுறை நேரிலே சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு கால் அடிபட்டு, கால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அவரை சென்னையிலே மருத்துவமனையிலே சேர்த்து செயற்கை கால் பொருத்தப்பட்டு அவருக்கு பணி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார், அதுவும் வழங்குவதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம்.
கேள்வி: எந்த ஒரு வாழ்வதார போராட்டம் நடந்தாலும் காவல்துறையை வைத்து தமிழக அரசு அடக்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
பதில்: இது தவறான கருத்து. இது அத்தனை ஊடகங்களுக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். அரசு வந்து ஏற்கனவே 9.4.2018 அன்றே ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலே மேலும் ஐந்து ஆண்டு காலத்திற்கு எங்களுக்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பம் அளித்திருந்தார்கள். அந்த விண்ணப்பத்தை 9.4.2018 அன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. அதை 13.4.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தினார்கள். ஆகவே, இந்த ஆலை இயங்காது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக அதை தடை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆலையை இயக்க முடியாது என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆலையை திறக்கமுடியாத அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பதை போராட்டக் குழு அனைவருக்கும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும், அந்த ஆலை மூடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க
-
3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் எதிரொலி: சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
01 May 2024சென்னை : 3, 5-ம் தேதி சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.