முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் முதல் பரிசு பெற்ற அமித்ஷா: ராகுல் கிண்டல்

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இந்தியாவிலேயே அதிக நோட்டுகளை மாற்றியது அமித்ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கி என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வாழ்த்துகள் அமித்ஷா ஜி, நீங்கள் இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அதிக அளவு பணத்தை அதாவது ரூ.750 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை 5 நாட்களில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி முதல் பரிசு பெற்றுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை சிதறி சின்னாபின்னமான நிலையில், இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த உங்களுக்கு எனது சல்யூட் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து