முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக பனி மூட்டத்தால் டெல்லியில் விமானங்கள் தாமதம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 22 - தலைநகர் டெல்லியில் என்றுமில்லாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானதால் 350 விமானங்கள் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து தரையிறங்கின. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். டெல்லி முழுவதுமே நேற்று அதிகாலை பனி மூட்டம் அதிகளவில் இருந்தது. எதிரில் உள்ளவைகள் தெரியாததால் தரைவழி போக்குவரத்து அடியோடு முடங்கிப் போனது. இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கும் ஓடுதளமே தெரியவில்லை. விமானிகளுக்கு பூஜ்யம் அளவுக்கு பார்வை தூரம் இருந்ததால் விமானங்கள் மேலேயே சுற்றிக் கொண்டும், அருகில் உள்ள நகரங்களை நோக்கியும் பறந்து கொண்டிருந்தன. இதனால் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. 120 விமானங்கள் தாமதமாகி உள்ளன. அதிகபட்சம் 8 மணி நேரம் கூட தாமதமாகியுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று அதிகாலை டெல்லியில் நிலவிய தட்பவெப்பம் 6 டிகிரி என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இந்த சீசனில் அதிகபட்ச வெப்பமே 14 டிகிரிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்