எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பிப்.- 3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இந்த ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு சி.பி. ஐ. கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தது. இதை தொடர்ந்து அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் தி.மு.க. வை சேர்ந்த ஆ.ராசாவை சி.பி. ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ம் தேதி கைது செய்தனர்.
இதை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி. ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி மேலும் பல ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கருணாநிதியின் மகளும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழியும் கைது செய்யப்பட்டார். இதே போல கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். 2 ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கூட்டு சதிகாரர் என்று சி.பி. ஐ.தனது குற்றப்பத்திரிகையில் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் ராசா உள்பட மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கனிமொழி உள்ளிட்ட சுமார் 10 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆ.ராசா மற்றும் சிலர் மட்டும் இன்னும் டெல்லி திகார் சிறையிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆ.ராசா 2008 ம் ஆண்டு தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்த 2 ஜி ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றும் சிதம்பரத்திற்கு தெரியாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எனவே சிதம்பரத்தையும் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சாமி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.
வாத பிரதி வாதங்களை கேட்ட நீதிபதிகள் நேற்று தங்களது தீர்ப்பை வெளியிட்டனர்.
2 ஜி ஊழல் வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணயினை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்ற சுப்பிரமணியம் சாமியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும் இந்த வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்த முடிவை 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே 2 ஜி வழக்கில் சிதம்பரம் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி. ஐ.சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி. சைனிதான் முடிவு செய்வார்.
நேற்றைய தங்களது தீர்ப்பு அல்லது உத்தரவு காரணமாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஏற்கனவே நடைபெற்று வரும் விசாரணைகள் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டிலும் சுப்பிரமணியம் சாமி இதே போன்ற ஒரு மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.
2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று சாமி அந்த மனுவில் கூறியுள்ளார். இது தொடர்பான ஆவணங்களையும் அவர் சி.பி. ஐ.சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஓ.பி.சைனி இது தொடர்பான தனது தீர்ப்பை பிப்ரவரி 4 ம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தனது பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஆ.ராசா தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்திருக்கிறார். ஆகவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் தொடர்பான விலை நிர்ணயத்தில் அவருக்கும் பங்கு இருக்கிறது என்றும் மேலும் 2 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே நடந்த பங்கு பரிவர்த்தனை விஷயமும் கூட அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது என்றும் ஆகவே சிதம்பரத்தையும் இந்த ஊழல் வழக்கில் விசாரிக்க வேண்டும் என்றும் சாமி தனுது மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சிதம்பரத்தின் தலை விதியை நிர்ணயிக்கப்போவது சி.பி. ஐ. சிறப்பு கோர்ட்டுத்தான் . இந்த கோர்ட்டு தனது முடிவை இன்னும் 2 வாரத்திற்குள் அறிவிக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 6 hours ago |
ஸ்வீட் பால்.4 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 11 hours ago |
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகல்
01 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அ
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
-
விருதுநகர் காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரி வெடி விபத்தில் 4 பேர் உடல்சிதறி பலி : உரிமையாளர்கள் 2 பேர் கைது
01 May 2024விருதுநகர் : விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
மொபைல் செயலிகள் மூலம் மோசடி: நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை
01 May 2024புதுடில்லி : மொபைல் செயலிகள் மூலம் முதலீடு திட்டங்கள் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி குறித்து நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் சி.பி.ஐ.
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பா? - மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
01 May 2024புதுடெல்லி : கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்க