முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினமும் இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.41,000 பரிசு ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ,ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தினமும் இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ. 41 ஆயிரம் பரிசு தருவதாக புதிய திட்டத்தை ஜப்பான் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கிரேசி இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் இந்தப் புதுவிதமான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், ஊழியர்களின் செல்போனில் ஒரு ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்படும். ஊழியர்கள் ஆன் செய்து வைத்து தூங்கும்போது, அந்த ஆப்ஸ் தூங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும். நாள் ஒன்றுக்கு இரவில் 6 மணி நேரம் அயர்ந்து தூங்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். இதன் மூலம், ஊழியர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

ஊழியர்கள் தூங்குவதற்கு பரிசளிப்பதுடன் நாங்கள் நின்று விடுவதில்லை. சிறந்த சத்துள்ள உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். விடுமுறை நாளில் அவர்களைச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம் என அறிவித்துள்ளது. விதிமுறைகள் படி சரியாக தூங்கிய ஊழியர்களுக்கு ஆண்டு முடிவில் இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். இதனை நிறுவனத்தின் அங்காடியில் உள்ள பொருட்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து