முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை : நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

நகரி : ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. கடந்த பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் தெலுங்குதேசம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணிக்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

நடிகர் பவன்கல்யாணும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சிறப்பு அந்தஸ்து பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் மந்திரியுமான லோகேஷ் மீது ஊழல் புகார் கூறி வந்தார். இதற்கிடையே பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லை என்று பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.

மேலும் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் ரகசியமாக இணைந்து செயல்படுகின்றன. இந்த இரு கட்சிகளும் சிறப்பு அந்தஸ்தை விவகாரத்தை சரிவர கையாளவில்லை என்றும் பவன்கல்யாண் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து