முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கண் சம்பந்தமான நோய்கள் குணமாக | குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய்கள் குணமாக | Cure Eye Related Problems

siddha-2

 

  1. கண்கள் ஒளி ;-- நேந்திர  மூலி,அதிமதுரத் தூள் உட்கொண்டு வர  கண்கள் ஒளி பெரும்.
  2. கண்எரிச்சல் ;-- அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி,மிளகு,ஆகியவற்றை பொடி செய்து தேன் கலந்து சூடுநீரில் சாப்பிட குணமாகும்.
  3. நீர் கோளை ;-- உடற்சூட்டினால் வரும் இதற்கு கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்.
  4. கண் நோய் ;-- குங்குமப்பூவை,தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்றிட குணமாகும்.
  5. கண் வலி,கண்சிவப்பு ,அரிப்பு ;-- வில்வம் தளிரை வதக்கி இளம்சூட்டுடன் கண்களின்மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
  6. கண்கள் குளிர்ச்சி;-- அரைக்கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து வரலாம்.
  7. கண் வலி, கண் சிவப்பு;--புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும்.
  8. கண் பார்வை தெளிவு ;-- பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம்.
  9. கண்நோய் தீர ;-- முருங்கை கீரை சாப்பிட்டு வரலாம்.
  10. கண் கூர்மை ;-- தான்றிக்காய் தோலை உறித்து பொடி செய்து கால் கரண்டி அளவு எடுத்து அதை தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர குணமாகும்.
  11. கண்ணில் சதை வளருவதை தடுக்க ;--  பிரமதண்டு இலைச்சாறு பால் ஒரு துளி கண்ணில் விடுவது பலன் தரும்.
  12. கண் ஒளி பெறுக ;-- தான்றிக்காய்  பொடி 1/4ஸ்பூன்  தேனில் கலந்து  காலையில் மட்டும் சாப்பிட்டு வரலாம் .
  13. கண் பிரகாசமடைய ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம்,உடல் நாற்றம் நீங்கும்.
  14. கண்களுக்கு குளிர்ச்சி தீர ;-- வெண்டைக்காய்யை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம்,மூளையும் பலமடையும்.
  15. கண்வலி வராமல் தடுக்க ;-- எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும்.
  16. கண் எரிச்சல் நீங்க ;-- தினமும் அரைக்கீரையை சப்ப்பிட்டு வரலாம்,உடல் குளிர்ச்சி அடையும்.
  17. கண்புரை குணமாக ;-- கீழாநெல்லி இலை,வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வரலாம்.
  18. குழந்தைகளுக்கு கண் சூடு தணிய ;-- நெல்லிக்காய்யை சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர குணமாகும்.
  19. கண் குளிர்ச்சி பெற ;-- சுரக்காய்யை பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியடையும்,மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  20. குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய்கள் குணமாக ;-- காய்ந்த மஞ்சளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும்.
  21. ஆரம்ப கட்டத்திலுள்ள பொறை குணமாக ;-- தங்களுடைய சிறுநீரால் கண்களைக் கழுவி வரலாம்.
  22. கண் பாதுகாப்பு ;-- ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம்.
  23. மாலைக்கண் நோய் குணமாக ;-- முக்கிரட்டை இலை,பொன்னாங்கண்ணி இலை,கீழாநெல்லி பொடி ஆகியவற்றை சம அளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
  24. கண் பிரகாசிக்க ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து குளித்து வரலாம்.
  25. கண் வலி, சிகப்பு தீர ;-- வில்வம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம்.
  26. பார்வை மங்கல் குணமாக ;-- முக்கிரட்டை வேறை பொடி செய்து காலை,மாலை ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  27. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது ;-- பச்சை தண்ணீர் சேர்க்கமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.
  28. கண் பார்வை தெளிவு,ஆண்மை பெருக்கம் உண்டாக ;-- பாதம் பருப்பை வறுத்து அடிக்கடி உண்டு வரலாம்.
  29. கண்ணில் சதை வளர்வதை தடுக்க ;--அருகம்புல்சாறை தாய்பாலில் கலந்து கண்ணில் விட சதை வளர்வது நிற்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்