முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய எல்லையில் வட கொரியா போர் ஒத்திகை

ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015      உலகம்
Image Unavailable

சியோல் - தென் கொரியாவுக்கு சொந்தமான தீவை கைப்பற்றுவது போன்ற போர் ஒத்திகையில் வட கொரிய ராணுவம் ஈடுபட்டதாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வடகொரியாவின் மூ தீவில் நடைபெற்ற இந்த போர் ஒத்திகையை அந்த நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் நேரடியாக பார்வையிட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. அடுத்த மாத தொடக்கத்தில் சர்ச்சைக்குரிய மஞ்சல் கடல் பகுதியில் அமெரிக்க, தென் கொரிய கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படவிருப்பதால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரித்து வரும் சூழலில் இந்த போர் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ர அமெரிக்க, தென் கொரிய கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூ தீவில் இருந்து வட கொரிய படைகள் தென் கொரியாவுக்கு சொந்தமான யெனோபியோங் தீவின் மீது தொலைதூர எறிகுண்டு வீசி தாக்கியதும் இதில் 4 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து