முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது மாடியிலிருந்து விழுந்த சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

பெய்ஜீங் - சீனாவில், ஐந்தாவடு மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது நேபாளச் சிறுவன், அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.இடையிலிருந்த தொலைக் காட்சி ஆன்டெனாக்களில் இடித்தபடி, அவன் தலைகீழாக விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கீழே நின்றிருந்த ஒரு காரின் மீது பலத்த ஓசையுடன் விழுந்த அந்தச் சிறுவன், காரிலிருந்து உருண்டு கிழே விழுந்ததாக அங்கிருந்த காய்கறி வாயாபாரி ஒருவர் தெரிவித்தார். விழுந்த பிறகு அந்தச் சிறுவன் புரண்டு படுத்தாலும் அவனால் எழுந்திருக்க முடியவில்லை.

உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, மருத்துவப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அந்தச் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கும்போது அவன் முழு நினைவுடன் இருந்ததாக மருத்துவப் பணியாளர்கல் தெரிவித்தனர். இத்தனைக்கும், அந்தச் சிறுவனுடன் வீட்டில் இருந்த அவனது 27 வயதுத் தாய்க்கு போலீசார் கதவைத் தட்டிச் சொல்லும் வரை தன் மகன் மாடியிலிருந்து கீழே விழுந்தத விவரம் தெரியாது.தாயின் அலட்சியத்தால்தான் சிறுவன் கீழே விழுந்தான் என்று சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து