முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு தனி வங்கி தொடங்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: விவசாயிகளுக்கென தனி வங்கி தொடங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.  நாட்டில் விவசாயம் லாபகரமாக இல்லாததால் விவசாயிகள் நொடிந்துபோய் கடனாளிகளாக உள்ளனர். அவர்கள் வாங்கிய விவசாய கடன்களை அரசு தள்ளு படி செய்யவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தன. விவசாயிகளுக்கென தனியாக வங்கி தொடங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் வைத்தன. 

பாராளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் ஒருவர் பேசுகையில்,  பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வகை செய்யும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த முன்வர வேண்டும். காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை சாதித்தபோது இதையும் செய்யலாம் என்றார்.

சமாஜ்வாதி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கூறிய தாவது, வானிலை மாறுபாடுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பயிர் காப்பீடு மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாக இருக்கவேண்டும், விவசாயிகளிடம் இருந்து வாங்கும் உணவு தானியங் களின் தரத்தைப்பற்றி பொருட்படுத்தாமல் இந்திய உணவுக்கழகம் கொள்முதல் செய்ய வேண்டும்.

கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு காட்டும் பரிவு அல்ல. மகளிர் வங்கி ஏற்படுத்தியது போல், விவசாயிகளுக்கு என தனி யாக வங்கி ஏற்படுத்தி அவர்களுக்கு ஒரு சதவீத வட்டியில் கடன் தரலாம். விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து