எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு ஆசிரியரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போகும். அதனாலேயே அவர் நடத்துவதை கவனிக்காமல், முழு மனதோடு படிக்காமல், அவர் மேலுள்ள வெறுப்பை பாடத்தில் காட்டினாலும் அந்த பாடத்தில் வீக் ஆவது நிச்சயம். மனவெறுப்பை மாற்றுவது தான் வளர்ச்சிக்கு வழி! ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஏன் வீக்காக இருக்கிறோம் என்பதற்கான காரணங்களை நீங்களே அலசி ஆராய்ந்து பிரச்னையைத் தீர்க்க வழி தேட வேண்டும்.
இயற்பியலில் வரும் கனக்குகளும், பார்முலாவும் பிடிக்கவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உடனே அதை வெறுப்பது தவறு. அந்தக் கணக்கைஒன்றுக்கு இரண்டு முறை உட்கார்ந்து போட்டுப் பார்த்தால் இயற்பியலில் நீங்கள்தான் கிங்!
வரலாறு பாடங்களில் வரும் Buy Doxycycline சம்பவங்களையும் வருடங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாயிருக்கிறது என்றால் அந்தப் பெயர்களையும் வருடங்களையும் கலர் ஸ்கெட்ச்சில் எழுதி அடிக்கடி கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே ஒரு வரலாறு ஆவீர்கள்!
புவியியல் பாடங்களில் வரும் இடம் நாடு, அமைப்பு போன்றவற்றை ஒருவர் இன்னொருவரிடம் மாற்றி மாற்றி விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாம். சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் தோழியின் பெயரை அதனுடன் தொடர்புபடுத்தி வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.
கணக்குப் பாடத்தில் ஒரு சேப்டர் முடிந்ததும் அதில் வரும் பார்முலாக்களை நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டால், இந்த சேப்டரில் இத்தனை பார்முலா என்ற தெளிவு இருக்கும். சும்மா ரிலாக்ஸாக இருக்கும்போது, அந்தப பக்கத்தை அடிக்கடித் திருப்பிப் பாருங்கள். கணக்கும் எளிதாக இருக்கும்.
இங்கிலீஷ் கிராமர் தகறாறு என்றால் பன்னிரண்டு Tense களையும் எழுதி, அதற்குக் கீழே உதாரணங்களையும் எழுதி வைத்து விடுங்கள்… உயிரியல் பாடங்களில் வரும் படங்களை ஒருமுறைக்கு இருமுறை வரைந்து பாகங்களை குறித்து விடுங்கள். பரீட்சையில் அதற்கான பலன் கிடைக்கும்…நிறைய மதிப்பெண்களாக. பொருளாதாரப் பாடங்களை ஒரு சினிமா கதைபோல் மனதுக்குள் ஓட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களோடு சம்பந்தப்படுத்துங்கள். அக்கவுண்ட்ஸ் கணக்கை நீங்களே ஒரு உதராணத்தை உருவாக்கி மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். சி.ஏ படிப்புக்கு உத்தரவாதம் ரெடி.
பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கம் இருக்கும். சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்……
குனிந்து வளைந்து உட்காரும் போது நம் நுரையீரல் சுருங்குவதால் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவும் அதன் மூலம் நம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறையும். இதனால் படிக்க உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவோம். பிறகு நமக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று முடிவுக்கும் வந்துவிடுவோம். கொட்டாவி ஆக்ஸிஜன் குறைபாடுதானே தவிர ஆர்வக் குறைபாடு இல்லை.
எனவே நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள். சுவாசமும் சீராக இருக்கும். சோர்வும் சட்டென்று ஏற்படாது. பொழுதுபோக்கு அம்சங்கள் வீடுதோறும் பெருகிய பிறகு மாணவர்களிடம் சத்தமிட்டு படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது. இது ஏன், வீட்டில் படிப்பதே குறைந்துவிட்டது. பெரும்பாலும் டியூசன் தான். டியூசனுக்கு போகும் மாணவர்கள் அங்கேயாவது சத்தமாக படிக்கிறார்களா? இல்லை……நீ மட்டும் படிச்சா போதுமா மத்தப் பசங்க படிக்க வேண்டாமா? என்று அதட்டலுக்குப் பயந்து மாணவன் சத்தமிட்டு படிப்பதே கேவலம் என்ற மனப்போக்கு தற்போது வளர்ந்து வருவது வேதனைக்குறியது.
தற்போது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் தமிழ் செய்தித்தாள் கொடுத்து, அதை சத்தமாக படிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். கண்டிப்பாக ஒரு பத்தி படிக்கும் முன், அவனுக்கு ஏற்படும் குரல் நடுக்கம், சொற்களில் ஏற்ற இறக்கம், வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது போன்ற பல்வேறு தவறுகளை நாம் கவனிக்கலாம். சத்தமாக படிக்கச் சொல்வது எதற்கு தெரியுமா? மொழி அறிவு, பேசும் திறமை, பேச்சு வளம், மொழியை உச்சரிக்கும் தன்மை இவற்றை புரிந்து கொள்ளத்தான்.
மாணவர்கள் படிக்கும் போது வாய்விட்டுப் படியுங்கள், மனதுக்குள் படிக்கும் போது மனப்பாட அறிவு வேண்டுமானால் வளரலாம், வாய்விட்டுப் படிக்கும் போது மட்டுமே மொழிவளம், மொழித்திறமை வெளிப்படும். தமிழ் படிக்கும் போது வார்த்தைகளின் உச்சரிப்பு, அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும். சத்தமாக நீங்கள் படிக்கும் போது உள்களது மொழி அச்சம், பயம் தானாகவே விலகிவிடும்.
நீங்கள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது உங்களது உச்சரிப்புத் திறமை உங்களுக்கு பதவியை தானாகவே ஈட்டித்தரும். உங்கள் அச்சத்தைப் போக்கும், தன்னம்பிக்கையை வளர்க்கும் வாய்விட்டுப் படிக்கும் பழக்கத்தை இனியாவது ஊக்கப்படுத்தலாமே!
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
அமெரிக்கா-உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்
26 Feb 2025வாஷிங்டன் : அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தம் உக்ரைன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.5 ஆயிரம் கோடியில் காலணி உற்பத்தி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
26 Feb 2025சென்னை, கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், 5000 கோடி ரூபாய் முதலீடு மற
-
9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Feb 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மே 2-ம் தேதி கேதார்நாத் கோவில் நடை திறப்பு
26 Feb 2025ருத்ரபிரயாக் : உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் மே 2-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-02-2025.
26 Feb 2025 -
ஓமனிலிருந்து தப்பிய தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்
26 Feb 2025கா்நாடகா : ஓமன் நாட்டி தப்பிய 3 தமிழக மீனவர்கள் கர்நாடக கடற்கரையில் பிடிப்பட்டனர்.
-
கெஜ்ரிவாலை மாநிலங்களவை எம்.பி.யாக்க ஆம் ஆத்மி திட்டம்?
26 Feb 2025டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்பார் என்ற செய்தி தவரானது என்று ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
-
பஞ்சாப், லூதியானா மேற்கு இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் சஞ்சீவ் அரோரா போட்டி
26 Feb 2025லூதியானா, பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
-
கலைஞர்கள் 45 பேருக்கு ரூ.45 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Feb 2025சென்னை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவினை 45 கலைஞர்கள் மற்றும் மரபுரிமையினருக்கு முதல்
-
வரும் 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை த.வெ.க. உருவாக்கும்: 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு
26 Feb 2025சென்னை, த.வெ.க. பண்ணையார்களுக்கான கட்சி இல்லை. அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள்.
-
மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு
26 Feb 2025சென்னை : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு அழைப்பு விட
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
26 Feb 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியை இன்னமும் தி.மு.க. எதிர்ப்பது ஏன்? தொண்டர்களுக்கு முதல்வர் மீண்டும் கடிதம்
26 Feb 2025சென்னை, இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், தமிழைக் காப்பதற்காகச் சிறைக் கொடுமைக்குள்ளாகி, தன் இன்னுயிர் ஈந்த நடராசன், தாளமுத்து எனும் மாவீரர்களை நெஞ்சில் ஏந்
-
உலக அளவில் பாராட்டக்கூடிய அளவில் தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
26 Feb 2025சென்னை, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் தமிழகத்தில் சிறந்த மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என்று 2,642 பேருக்கு மருத்துவ அலுவலர்
-
தமிழ்நாடு அரசியலில் இன்னும் பல பூகம்பங்கள் நடக்கவுள்ளது : ஆதவ் அர்ஜூனா பேச்சு
26 Feb 2025சென்னை : தமிழ்நாடு அரசியலில் இன்னும் பல பூகம்பங்கள் நடக்கப்போகிறது என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழாவில் #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் தலைவர் விஜய்
26 Feb 2025சென்னை : மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று (பி
-
ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்பங்களில் இன்று முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்
26 Feb 2025சென்னை, பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
26 Feb 2025கோவை, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமைியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
26 Feb 2025நாகப்பட்டினம் : கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல்
26 Feb 2025சென்னை : 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
உள்ளூரிலேயே விலைபோகாதவர்: பிரசாந்த் கிஷோர் குறித்து அமைச்சர் கே.என்.நேரு
26 Feb 2025திருச்சி : திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, பிரசாந்த் கிஷோரை விமர்சித்துள்ளார்.
-
த.வெ.க.வின் மும்மொழி கொள்கைக்கு எதிரான பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
26 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து பதாகையில் தேர்தல் விய
-
பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்குகிறது: முன்னேற்பாடு பணிகளில் தேர்வுத்துறை தீவிரம்
26 Feb 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத
-
தெலங்கானா பள்ளிகள் அனைத்திலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கியது மாநில அரசு
26 Feb 2025தெலங்கானா, தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கணினிக்கல்வி கற்பிக்கும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை கணினி அறிவியல் மற்றும் கல்வியியல் படித்த ஆசிரியர்கள் மூலம் கற்பிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.