எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் நகர மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் திருமங்கலம் நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், அம்மா அவர்களின் புகழை இந்த மண்ணிலிருந்தும் மக்கள் மனதிலிருந்தும் எவராலும் பிரித்துவிட முடியாது என்று மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து பேசினார்.
அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம்:
அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா,கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம்,திருமங்கலம் நகர மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழக அ.தி.மு.க சார்பில் திருமங்கலம் நகர் தேவர்திடலில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெசுசிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமை வகித்தார்.டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராம்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,திருமங்கலம் நகர அவைதலைவர் ஜஹாங்கீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு:
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அம்மாவின் பெயரால் அரசுவிழா நடத்துவதற்கு தனது வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி தமிழக மக்களின் நெஞ்சம் பொறுக்க முடியாத குற்றச்சாட்டுகளை சொல்லி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்து வருகிறார்.புரட்சித்தலைவி அம்மா பிறக்கும் போதும் புனிதராக பிறந்தார்.அவர் வாழும் போதும் புனிதராகவே வாழந்தார்.அவர் இந்த மண்ணை விட்டு உயிர்பிரிகிற வரை தமிழக மக்களுக்காக உழைத்து புனிதராகவே மறைந்தார்.ஆக பிறக்கிற போதும் புனிதர்,வாழுகிற போதும் புனிதர்,மறைந்த போதும் புனிதராகவே மறைந்து இருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களை புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசா இல்லம் தேடிவந்து வாழ்த்தினார் என்றால் அந்த புனிதவரலாறு அம்மா அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.ஆகவே பதவி வெறிபிடித்து அம்மாவின் ஆட்சியை அகற்ற நினைக்கிற மு.க.ஸ்டாலின் அவர்களின் வார்த்தைகள்,அவர் உதிர்த்திருக்கிற கடும் சொற்கள் தமிழக மக்களின் இதயத்தில் வேதனையை உருவாக்கி இருக்கிறது.உலகத்தமிழர்கள் உள்ளத்திலே துயரத்தை உருவாக்கி இருக்கிறது.ஆகவே இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவாரானால் அம்மாவின் புகழுக்கு புகழ் சேர்க்கிற தியாக வரலாற்றை அவர் மறைக்க நினைக்கிறார்.அம்மாவுடைய புகழை அவர் மாத்திரமல்ல எவர் நினைத்தாலும் இந்த உலகத்திலே தடுத்திட முடியாது.அம்மாவுடைய புகழ் அம்மாவுடைய தியாகம் இந்த உலகத்தில் வான் உள்ளவரை,வையகம் உள்ளவரை,இந்த மண் உள்ளவரை அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும்.ஸ்டாலின் நினைத்தால் அவர் ஒருவர் மாத்திரமல்ல அந்த நினைப்பு கொண்ட எவராலும் அம்மாவின் புகழை இந்த மண்ணிலிருந்தும் மக்கள் உள்ளத்திலிருந்தும் பிரித்துவிட முடியாது என்று பேசினார்.
கலந்து கொண்டவர்கள்:
இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,தலைமை கழக பேச்சாளர்கள் ராஜேந்திரன்,நாஞ்சில் கோபிநாத்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் திருப்பதி,வக்கீல் ரமேஷ்,தமிழ்ச்செல்வம்,நிலையூர் முருகன், பிரேம்ஆனந்த்,முன்னாள் திருமங்கலம் நகராட்சி துணை சேர்மன் சதீஸ்சண்முகம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் பாவடியான்,மாவட்ட பிரதிநிதி கலைச்செல்வன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,அவைதலைவர் அன்னகொடி,முன்னாள் ஒன்றிய கவுன்;சிலர்கள் செல்வம்,சிவஜோதிதர்மர்,பழனிச்சாமி,முனியாண்டி கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், கருப்பணன்,பி.ஆர்.சி.கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n