எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை- மதுரை பாண்டியன் ஹோட்டலில், பொது விநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர்ஆர்.காமராஜ் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர்செல்லூர்.கே.ராஜு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
பொதுவிநியோகத்திட்ட முழு கணினிமயமாக்குதல் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கல் தொடர்பான முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் நிறைவுற்ற நிலையில் இன்று மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் போன்ற அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம், தனி மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கி தமிழ்நாட்டின் வருவாயில் 48 சதவீதத்தில் சமூகநலப்பணிக்காக ஒதுக்கி பல திட்டங்களை தீட்டியுள்ளார் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா.
போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் 37 நகரும் நியாயவிலைக்கடைகள் மூலம் 26500 குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர், ராவணபுரம் கூட்டுறவு சங்கத்தின் மூலம் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. திருச்சிக்குட்பட்ட சிறுபலமலையில் வாழும் 48 குடும்பங்களுக்காக மாதம் இரு முறையும், பெருபலமலையில் வாழும் 19 குடும்பங்களுக்காக மலைப்பகுதியில் பயணம் மேற்கொண்டு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.
..
உணவுக்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 979 நபர்கள் தடுப்புகாவல் தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடுஅரசு ஏழை, எளிய மக்களுக்காக வேறு எந்தவொரு ஆட்சிக்காலத்திலும் இல்லாத அளவிற்கு மலிவான விலையில் துவரம்பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. மேலும் புளி, வெங்காயம் போன்ற பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தும் பொருட்டு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
பண்ணைப்பசுமை காய்கறி திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக காய்கறிகளை பெற்று பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 25 கம்பெனிகள் புதிதாக தொழில் துவங்க அனுமதி வழங்கியதன் மூலம் 65000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பு அளித்திடும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் உன்னதமான திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் முழுப்பயன்களும் உரியவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் ரூ.330 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவித்தார்கள்.
இதன்படி, 01.04.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் தொடங்கப்பட்டு இன்று வரை 86 இலட்சத்து 18 ஆயிரம் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின்னணு அட்டைகள் வழங்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 1 கோடியே 90 இலட்சத்து 75 ஆயிரத்து 778 குடும்ப அட்டைகளில், 1 கோடியே 38 இலட்சத்து 2 ஆயிரத்து 770 அட்டைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் முழுவதுமாகவும், 50 இலட்சத்து 85 ஆயிரத்து 431 அட்டைகளுக்கு பகுதியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் இணைத்துள்ள ஆதார் விபரங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்தலின் போது ஏற்படும் தவறுகளால் மின்னணு அட்டை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்காக தாலுகா அளவில் ஒரு குழு அமைத்து இக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றபின் அதில் மாற்றங்கள் தேவைப்படின் கைப்பேசி செயலி (ஆழடிடைந யுpp)இ பொதுமக்களுக்கான வலைதளம் (வnpனள.பழஎ.in) மற்றும் உதவி ஆணையாளர்கள் , வட்ட வழங்கல் அலுவலகங்களில் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் பேசும்பொழுது தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முதலாக செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டம் ஒரு முன்னோடியான திட்டம் ஆகும். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் தற்பொழுது பயன்படுத்தி வரும் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தற்பொழுது பொதுவிநியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க மறைந்த நமது தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உத்தரவிட்டார்கள்.
மின்னணு குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தி வரும் குடும்ப அட்டைகளை கொண்டு தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தங்கு தடையின்றி வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
பின்னர் நடந்த பயிற்சி வகுப்பில் உணவு மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் பொது விநியோகத்திட்ட கணினிமயமாக்கல் தொடர்பாக அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய பு2புஇ ஆஐளு மற்றும் பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய வnpனள ஆகிய வலைதளங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை விரைவில் வழங்கிட எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி, மின்னணு அட்டைகள் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில், அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர்பிரதீப் யாதவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதன்மைச் செயலாளர் , நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்ஏ.ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்),பி.நீதிபதி (உசிலம்பட்டி),பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையாளர் கே.பிரியா, மற்றும் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n