எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக வீடுகள் - கடைகள், பள்ளிகளுக்கு அபராதம் விதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடவடிக்கை தீவிரம்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுப்புறங்களை சுகாதாரம் இல்லாமல் வைத்திருந்து டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் முதல் சுகாதாரமற்ற நிறுவனங்கள் மற்றும் வீடுகளை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நோட்டீஸ்
வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமல்லாது சுகாதாரமற்ற பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதாக கடைகள், நிறுவனங்கள், வீடுகள் என 3 லட்சம் பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினர். அதன்பிறகும் கொசுக்கள் உற்பத்தியாகும் கழிவுகளை அகற்றாததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்தும் இதே நிலை நீடித்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக்கு அபராதம்
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே நவோதயா பள்ளியைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும், சின்னவேப்பனம் அருகே நேஷனல் பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 4 குழந்தைகளுக்கும் டெங்கு பாதிப்பு இருந்தது. இந்த பாதிப்பு ஏற்பட்ட பிறகும் அந்த பள்ளிகளில் சுகாதார பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பள்ளியை சுற்றி தேங்கி இருந்த தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதனால் அந்த 2 பள்ளிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளின் சுகாதாரச் சான்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை சட்டத்தின்படி விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது மட்டுமல்லாது நூலகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை - நெல்லை
தஞ்சை மாவட்ட நூலகத்தில் சுகாதார மற்ற நிலையில் பொருட்கள் இருப்பதையும் அதிகாரிகள் ஆய்வின்போது கண்டறிந்தனர். அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்ததால் அந்த நூலகத்திற்கு ரூ.1000 அபராதம் விதித்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். நெல்லை என்.ஜி.ஓ காலனியில் ஒரு கட்டிட உரிமையாளரின் வீட்டு தண்ணீர் தொட்டியில் ஏராளமான கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டதால் அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். பாளையங்கோட்டையில் ஒரு கட்டிட உரிமையாளருக்கும், செந்தில் நகரில் ஒரு உணவு விடுதி உரிமையாளருக்கும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் - நாகர்கோவில்
கடலூர் கம்மியம்பேட்டை, சுப்பராயலு நகர் பகுதிகளில் உள்ள டயர் விற்பனை செய்யும் கடை, பஞ்சர் ஒட்டும் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 8 கடைகளில் இருந்த டயர்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் டெங்கு கொசுக்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 8 கடையின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடையில் இருந்த 4 டன் டயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 வர்த்தக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து ரூ.38 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை - ஈரோடு
கோவையில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், வீடுகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்ததாக 1000 வீடுகள், 2 ஆயிரம் நிறுவனங்கள் என மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும், நிறுவனங்களுக்கு ரூ. 1000 முதல் ரூ.5000 வரையும் என மொத்தம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடு, கடை, காலிமனை உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்து ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 987 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. காரைக்குடியில் சுகாதாரமற்ற வீடு, கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரியத்தில் நேற்று மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். அப்போது 3 கட்டிடங்களில் இருந்த தொட்டிகளில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கி தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n