எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சேலத்தில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்றும், கோவை மாவட்டம் சூலூர் விமானநிலையத்தில் ராணுவத்திற்கான பராமரிப்பு பழுது பார்ப்பு மையத்தை அமைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ராணுவ தொழில் வளர்ச்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
வரவேற்கத்தக்கது
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆட்டோ மொபைல்ஸ், ஜவுளி, தோல், எலக்ட்ரானிக், ஹார்ட்வேர், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கும் வலுவான தொழில்துறை சூழ்நிலை காரணமாகவும், உயர் தேர்ச்சி, மனித வளம் பெருமளவில் கிடைப்பதன் காரணமாகவும் இது சாத்தியமாகி இருக்கிறது. இதன் காரணமாக உலகதரத்தை நாம் சந்திக்க முடிந்துள்ளது.
120 நிறுவனங்கள் ...
தமிழ்நாட்டில் 70 என்ஜினியரிங் கல்லூரிகளில் வானூர்தி குறித்த தொழில்நுட்ப பாட வகுப்புகளை நடத்தி வருகிறோம். இதில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் வானூர்தி தொழில்நுட்ப என்ஜினியர்கள் பட்டம் பெற்று வெளிவருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள வானூர்தி தொழில்நுட்ப நிறுவனங்களில் நம்முடைய தொழில்நுட்பக் கலைஞர்களும், என்ஜினியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டம் 2023-ஐ அறிமுகப்படுத்தினார். இதில் வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானூர்தி தொழில்நுட்பத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதில் 120 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
வேலைவாய்ப்பு...
பல்வேறு ராணுவ நிறுவனங்களுக்கும், அரசுத்துறை நிறுவனங்களுக்குமென 700-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் இருந்து வருகிறார்கள். ஆட்டோ மொபைல் உற்பத்தித் திறனில் தமிழ்நாடு வலுவாக உள்ளது. இந்நிலையில் அடுத்த இலக்கு நமக்கு இருப்பது வானூர்தி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைதான். இந்தியாவில் வானூர்தி தொழில்நுட்பத்துக்கு தேவைப்படும் உபகரணங்களில் 30 சதவீத அளவை வழங்கும் வகையில் தமிழகம் தன்னை தயாரபடுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் உள்ளது. இத்தகைய நடவடிக்கையில் ஒன்று தான் ஸ்ரீபெரும்புதூரில் உருவாகும் சென்னை வானூர்தி பூங்கா. முதல் கட்டமாக இந்தப் பூங்கா 250 ஏக்கரில் உருவாகி வருகிறது.
தயாராக இருக்கிறோம்
அடுத்தக் கட்டம் 500 ஏக்கர் அளவுக்கு விரிவுப்படுத்தப்படும். இந்தப் பூங்காவில் 50 வானூர்தி மற்றும் ராணுவத்துறை நிறுவனங்கள் இடம்பெறும். இவை ஒரிஜினல் உபகரணங்கள் தயாரிக்கும் மத்திய அரசின் ராணுவத் துறை கொள்முதல் கொள்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும். அதே சமயத்தில் விமானங்கள் பராமரிப்பு, பழுது பார்ப்பு, ஓவர்ஹால் மையம் சம்பந்தப்பட்ட பகுதியும் மிகவும் முக்கியமானதாகும். ஆகவே சென்னையில் இந்த வானூர்தி பராமரிப்பு, பழுது பார்ப்பு, ஓவர் ஹால் மைய வளாகத்தை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தங்களது யூனிட்டை, கடைகளை ஏற்படுத்த பராமரிப்பு, பழுதுபார்ப்பு ,ஓவர் ஹாலிங் ஆபரேட்டர்கள் முன் வந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
பரிசீலிக்க வேண்டும்
உத்தேசித்துள்ள மிகவும் மேம்பட்ட கணினி முறை கணக்கீடு, வடிவமைப்பு என்ஜினியரிங் மையத்தை ரூ.180 கோடி செலவில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இது 5 லட்சம் சதுர அடியில் உருவாகி வருகிறது. சென்னை வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறை பூங்காவில் பன்னாட்டுக்கு உற்பத்தி வளாகத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இத்தகைய பின்னணியில் தமிழ்நாட்டில் பொருத்தமான ஒரு இடத்தில் ஹால் நிறுவனத்தால் அமைக்கப்படும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை மற்றும் எளிய ரக போர் விமானங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சேலத்தில் இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்கிறேன்.
முதலீடு செய்ய...
இதேபோல கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் ராணுவத்துக்கான பராமரிப்பு பழுது பார்ப்பு ஓவர் ஹால் மையத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் நடுத்தர சிறு தொழில் நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதில் முதலீடு செய்பவர்களுக்கு தேவைப்படும் நிலம் மற்றும் கட்டமைப்புகள் இதர வசதிகள் மின்சார வினியோகம் ஆகியவற்றை ஒற்றை சாளர முறையில் வழங்க தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் உதவிடும். மாநிலத்தில் சுலபமாக தொழில் துவங்க ஒரு கூட்டத்தையும் தமிழ்நாடு அரசு சமீபத்தில் இயற்றியுள்ளது. இதேபோல ஒரு கூட்டத்தை கோவை நகரிலும் நடத்தலாம். உங்கள் அனைவரையும் அன்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் முதலீட்டுக்கு வாருங்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து உதவிகள், ஆதரவை அளிக்க நான் உறுதி கூறுகிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.18 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 17 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 17 hours ago |
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n