முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

திங்கட்கிழமை, 21 மே 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு  நாள் உறுதிமொழி  ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள்  எடுத்துக் கொண்டனர்.
 முன்னாள் பாரத பிரதமர் அமரர் இராஜுவ்காந்தி நினைவுதினமான மே 21ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் “கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்”  உறுதிமொழி எடுத்துக் கொள்வது மரபாக இருந்து வருகிறது.
உறுதிமொழி
 அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்று அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதேபோன்று மண்டல அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் .ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர் (கணக்கு) .குமார், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், கணக்கு அலுவலர் (பொது)  சுரேஷ்குமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து