முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல்

சனிக்கிழமை, 9 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுவையிலும் சில நேரங்களில் மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சி, நீலகிரி ஜி.பஜாரில் 5 செ.மீ மழையும், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில், 3 செ.மீ மழையும் பெய்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து